yuukikkamudiyavillai

Posted by அகத்தீ Labels:


#யூகிக்க முடியவில்லை

மூளையைக் கசக்கி கசக்கி
யோசித்து யோசித்து
சோர்ந்து போகிறேன் ….
இனி என்ன நடக்கும் ?
யூகிக்க முடியவில்லை…..


வெறுப்பின் கருகிய வாடை
குடலைப் புரட்டுகிறது
பாதம் வெடிக்க நடக்கும் மனிதர்களைப்
பார்த்து பார்த்து பதறுகிறது மனது


மோடியின் வாய்ப்பந்தலில்
ஒரு புடலங்காயும் காய்க்காது
காற்றில் நிர்மலா வரைந்த கணக்கு
ஒற்றைப் பருக்கைக்கும் ஆகாது
கனவுக் கோட்டைகளில்
சுல்தான் மோடிஷா சஞ்சரிக்கிறார்

கொரானா பீதியில் உறைந்த மக்கள்
விழித்துப் பார்த்த போது
கொள்ளிவாய் பிசாசு , இரத்தக் காட்டேரி,
விதவிதமாய் பேய் பிசாசு சாத்தான்கள்
எதிர்காலம் இருட்டாய் மர்மமாய்
பேரச்சத்தை உள்ளதில் உசுப்புகிறது

மூளையைக் கசக்கி கசக்கி
யோசித்து யோசித்து
சோர்ந்து போகிறேன் ….
இனி என்ன நடக்கும் ?
யூகிக்க முடியவில்லை…..
 
இந்த அமைதி நிச்சயம்
சமாதானத்தின் அறிகுறி அல்லவே !

சுபொஅ.

0 comments :

Post a Comment