ஓர் பிரார்த்தனை – ஓர் அசரீரி!

Posted by அகத்தீ





ஓர் பிரார்த்தனை – ஓர் அசரீரி!


 “ ஆண்டவரே ! ஆண்டவரே !
என்னை ஏன் மனிதராகப் படைத்தாய் ?
என்னை ஏன் மனிதராகப் படைத்தாய் ?
சாதியை மதத்தை கட்டி அழும்
மனிதம் செத்த தேசத்தில்
என்னை  ஏன் மனிதராய்ப் படைத்தாய் ?
விலங்காகச் சபித்துவிடு ! விலங்காகச் சபித்துவிடு
சாதி ,மதம் இல்லாத விலங்காகச் சபித்துவிடு !”

 “ பக்தா ! பக்தா ! மூடபக்தா !
உனக்கு வாயிருக்கு அழுகிறாய்
உணர்ச்சி இருக்கு கொதிக்கிறாய்
வெறும் கற்சிலைக்கும் கற்பனைக்கும்
என்ன இருக்கும் ? மூடபக்தா !
எனக்கும் சாதி இல்லை .மதம் இல்லை .
இனம் இல்லை .மொழி இல்லை .தேசம் இல்லை .
இந்த மனிதப் பதர்களிடையே நான் படும்பாடு
தாளம் படுமோ ? தறி படுமோ ?
தற்கொலை செய்து கொள்ளலாம் எனில்
எனக்கு உயிரும் இல்லையே !”

சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment