மனம் முழுக்க அழுக்கு இருள்

Posted by அகத்தீ Labels:




மனம் முழுக்க அழுக்கு இருள்
மருந்துக்கும் ஒளி துளி இல்லை .
மரத்துப்போன இதயம் அதற்கு !
மனிதர் என்ற பெயர் எதற்கு ?

மதம் பிடித்தே அலைகின்றாய்
மனிதத்தை வெறுப்பில் அழிக்கின்றாய்
அன்பெனும் அமுத ஊற்றை – உந்தன்
அறியாமை நெருப்பில் தூர்க்கின்றாய்

கடவுளின் மதம் எது ? மொழி எது ?
தேசம் எது ? இனம் எது ?தெரியுமா ?
ஆராய்ந்து அடையாளம் காட்ட
ஆகுமோ உன்னால் ! உன் வாழ்நாளில் !

அண்டை அயலானை நேசித்தால்
ஆண்டவனுக்கு அடுக்காதோ ஐயா !
வெறுப்பில் வேர்கொண்ட மதவெறி
மானுடத்தைச் சுட்டுப் பொசுக்கிடுமே!

சுபொஅ.



0 comments :

Post a Comment