உனக்குள் நீயே சுருங்கிவிடு ! [ ஆன்மீக அரிச்சுவடி ]

Posted by அகத்தீ Labels:








உனக்குள் நீயே சுருங்கிவிடு !
[ ஆன்மீக அரிச்சுவடி ]


மனதே!மனதே !
நீயாய் ஒன்றும் நாடாதே !
உனது துன்பம் நீயே காண் !

உன்னைச் சுற்றிப் பார்க்காதே !
வீட்டுக்குள்ளே முடங்கி இரு !
உனக்குள் நீயே சுருங்கிவிடு !
உண்மை என்பது சுடும் நெருப்பு .

[மனதே!மனதே ! ]


அறிவை அடகு வைத்துவிடு !
அன்பை சுயநலம் ஆக்கிவிடு!
மனிதம் கொன்று புதைத்துவிடு!
மதத்தைத் தூக்கிக் கொண்டாடு !

[மனதே!மனதே ! ]

கணமும் உண்மையை நெருங்காதே !
கனவிலும் பொய்யை மறவாதே !
கயமை ,வஞ்சகம் கைக்கொள்க !
கடவுளின் பின்னால் ஒழிந்திடுக !

[மனதே!மனதே ! ]

நோயிலும் மதத்தைக் கலந்துவிடு!
சடங்காய் எதையும் கடந்துவிடு!
உன்னை மட்டுமே காத்துக்கொள்!
உலகை தீமை சூழந்து அழிக்கட்டும் !

சுபொஅ.




0 comments :

Post a Comment