சொல்.69.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .69 [ 11 /11/2018 ]
 “சார் ! வாஸ்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க ?” என ஒருத்தர் என் வாயைக் கிளறினார் .

 “வீடு கட்டுவதற்காக ஆதியில் சில நெறி முறைகளை உருவாக்கி இருக்கலாம் .அவை அன்றையப் புரிதல் ,தேவையை ஒட்டி எழுந்திருக்கலாம். அவற்றில் பல உருவான இடத்தின் தட்ப வெப்பம் சார்ந்தும் பருவ சுழற்சி சார்ந்தும் வாழ்க்கை பழக்க வழக்கங்கள் சார்ந்தும் உருவாக்கப் பட்டிருக்கலாம் ; ஆனால் அவை இன்றும் எங்கும் அப்படியே பொருந்தும் என்பதும் ; வாழ்க்கை செழிப்பிற்கோ துன்ப துயரங்களுக்கோ அதுவே காரணம் என்பதும் வடிகட்டிய மூடத்தனம் என்பதன்றி வேறென்ன ?”

வீட்டில் கழிப்பறை என்பதோ , படுக்கை அறையோடு இணைந்த கழிப்பறை என்பதோ பண்டைய வாழ்வில் யோசித்திருக்கவே முடியாத ஒன்றல்லவா ? அடுக்களை என்பது விறகடுப்பின் தேவையை ஒட்டி ஜன்னல் எதுமின்றி இருட்டாய் ஒதுக்குப் புறமாய் இருப்பது அன்றையத் தேவை ,இன்று எரிவாயு பயன்படுத்தும் சூழலில் காற்றோட்டமாய் ,விபத்து எனில் உடன் தப்ப உகந்ததாய் முன்பக்கம் அமைவதே பொருத்தமானது .

நிறைய இடவசதியும் மக்கள் தொகை குறைவாகவும் இருந்த அப்போதைய வாஸ்து அது சார்ந்துதானே இருக்கும் .இன்று பெரும் மக்கள் தொகை .எல்லோருக்கும் வீடு எனில் அடுக்ககங்களே சாத்தியம் .ஆக இன்றைய தேவையும் வாய்ப்பும் அதற்குத் தகுந்தாற் போல் மாறித்தான் ஆகவேண்டும் .இங்கு இதை இப்படி மாற்றிவை அப்படி மாற்றி வை என்பதெல்லாம் இடவசதி ,தேவை பற்றிய ஞானமின்றி செய்யப்படும் வாஸ்து மூடத்தனமே !

அதெல்லாம் இருக்கட்டும் !  ‘பெட்ரூம்’ , ‘பிரைவேஸி’ என்றெல்லாம் நுனிநாக்கில் பேசுவோரே ! ஏழைகளுக்கு அரசு ஒதுக்கும் வீட்டில் ஒற்றை அறையில் கணவன் ,மனைவி ,வயதுக்கு வந்த பெண் ,பிள்ளை ,அப்பா ,அம்மா எல்லோரும் இடித்துக்கொண்டு படுக்க வேண்டும் .நீங்கள் சொன்ன எதுவும் அவர்களுக்கு இல்லையா அல்லது மனித மாண்பே அவர்களுக்கு மறுக்கப்படுவதேன் ? வாஸ்து /வீட்டு பிளான் எதுவாயினும் வர்க்கம் ,வர்ணம் ,சாதி எல்லாம் மூக்கை நுழைக்கத்தானே செய்கிறது என்னத்தச் சொல்ல?
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment