முசோலினி கால ‘திமாகி நக்சல்’…. கதை : … வரலாற்றுப் பாடம் …

Posted by அகத்தீ Labels:

 


முசோலினி கால  திமாகி நக்சல்…. கதை : வரலாற்றுப் பாடம்

 

 




பேர் வென்டான்னி தொப்பியாமோ இம்பெதீரே அ க்வெஸ்தோ செர்வெல்லோ தி ஃபுன்சியோனாரே…..

[ Per vent'anni dobbiamo impedire a questo cervello di funzionare ]

 

இது இத்தாலிய வாசகம் ....ஆங்கிலத்தில் இதன் பொருள்.…

"For twenty years we must stop this brain from functioning."

 

தமிழில்ச் சொல்வதாயின்…

"இந்த மூளையை இருபது ஆண்டுகளுக்கு இயங்காமல் தடுக்க வேண்டும்."

 இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமாயின்…..

"இந்த மூளையை இருபது ஆண்டுகள் சிந்திக்க விடாமல் முடக்க வேண்டும்."

 

 இப்படிக் கொக்கரித்தன் இத்தாலியின் நாசிஸ்ட் முசோலினி ….

இரண்டாம் உலகப்போரின் மூன்று சைத்தான்களில் ஒருவர் ; ஆம் ஹிடலர் ,முசோலினி ,தோஜோ என மூன்று சைத்தான்கள்.... 

 

யாரைப் பார்த்துக் கொக்கரித்தான்

இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் அன்டோனியா கிராம்ஸியைப் [ Antonio Gramsci ] பார்த்து …

 

ஏன் கொக்கரித்தான் ?

உழைப்பாளி மக்களைச் சிந்திக்கத்தூண்டியதகாக …

நாசிசத்தை எதிர்க்க அணிதிரட்டியதற்காக …

 

இப்படிக் கொக்கரித்த்து முசோலினியா அல்லது வேறு யாரேனுமா ? எப்போது  ?

 

1926 நவம்பர் 8 ஆம் நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய தடை செய்யப்பட்டிருந்த ‘ விலக்குரிமையை’ மீறி தோழர் கிராம்ஷி கைது செய்யப்பட்டார் …

1928 மே 28 ஆம் நாள் ரோம் நகரில் நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மைக்கேல் இஸ்குரோ [Michele Isgrò] இவ்வாறு கொக்கரித்தார் . இது முசோலினியின் குரலாகவே உலகெங்கும் பார்க்கப்பட்டது . இன்றும் பார்க்கப்படுகிறது .

 

அப்படியாயின் கிராம்ஷியின் பேச்சையும் எழுத்தையும் கண்டு முசோலினி எவ்வளவு மிரண்டிருந்தால் இவர் மூளை சிந்திப்பதை நிறுத்த வேண்டும் எனக் கொக்கரித்திருப்பான்…. யோசித்துப் பாருங்கள் …

 

தெற்கு இத்தாலிக்கும் வடக்கு இத்தாலிக்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகளைப் பேசினான்…

நாட்டைச் சூறையாடி ஆதிக்கம் செய்யும் சுரண்டலுக்கு எதிராகப் பேசினான்…

உழைக்கும் மக்களை ஒன்று திரட்டப் பேசினான்…

கம்யூனிஸ்டுகள் பண்பாட்டுத்துறையின் சீரிய கவனம் செலுத்தச் சொன்னான் … பாசிசமும் நாசிசமும் நுழையும் துறை அதுவென்பதை தோலுரித்துக் காட்டினான் …

 

 

கோபம் வராதா சர்வாதிகாரிக்கு ?

கோபம் வரதா நாசிஸ்ட் முசோலினிக்கு ?

 

 

1981 ஜனவரி 22 ஆம் நாள் சார்தீனியா நகரில் பிறந்தான் அண்டோனியா கிராம்ஷி.

இளமையிலேயே கம்யூனிஸ்டாக மாறினான் ..

 

34 வயதில் நாசிஸ்ட் முசோலினியால் கைது செய்யப்பட்டான்…முதலில் உஸ்டிகா தீவிலும் பின் பாரி அருகே தூரி சிறையிலுமாக 11 ஆண்டுகள் கொடும் சித்திரவதையை அனுபவித்தான்…. அவன் பிறப்பிலேயே உடல் பலவீனமானவன் ….. சிறை வாழ்க்கை மேலும் அவனை சீர்குலைத்த்து …

 

குத்துயிரும் குலையுயிருமாய் 1937 ஏப்ரல் 21 ஆம் நாள் விடுவிக்கப்பட்டான் …விடுவிக்கப்பட்ட ஆறே நாட்களில் 27 ஏப்ரல் 1937 இல் தன் 46 வது வயதில் இறந்தான் … இது சிறைக்கொலை எனில் மிகை அல்ல….

 

எந்த மூளை சிந்திக்கக்கூடாது என முசோலினி கொக்கரித்தானோ அந்த மூளை கிராம்ஷியின் மூளை சிறையில் கூட சிந்திப்பதை நிறுத்தவில்லை.

 

சிறையில் 11 ஆண்டுகளில் 33 குறிப்பேடுகளில் 2,848 பக்கங்களை எழுதினார் - அதுதான் பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற Prison Notebooks (சிறைக் குறிப்பேடுகள்) ஆனது.தமிழிலும் வெளிவந்துள்ளது.

 

 

வரலாற்றின் ஏடுகளை புரட்டிக்கூடப் பார்க்காத சிலர்  “திமாகி நக்சல்” என்கிற ரப்பர் ஸ்டாம்பு குத்தி கம்யூனிஸ்டுகளைக் கருவறுத்துவிடலாம் என பகல்க் கனவு காண்கிறார்கள் …

 

வரலாறு முடியவில்லை….. தொடரும்…..

 

 

சுபொஅ. 

0 comments :

Post a Comment