குட்டிக்
கதை
தாத்தா இறந்து
விட்டார் . அவர் நினைவஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவரது போட்டோ சாமி படங்களின் நடுவே
கூடத்தில் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது .
ஊதுபத்தியும் மணம் வீசத் தொடங்கிவிட்டது .
“ அப்பா
! ஏன்பா ! தாத்தா படத்துக்கு பூமாலை போடுறீங்க !”
“ தாத்தா
சாமியாயிட்டாரும்மா ! அதுதான் மாலை எல்லாம் போட்டு கும்பிடுறோம்….”
“ அப்பா
! அந்த சாமி எல்லாம் கூட செத்துப் போச்சா ? அதுதான் மாலை போடுறோமா ?”
அப்பா திருதிருவென
விழித்தார் .
சுபொஅ.
20/05/25.
0 comments :
Post a Comment