எனது அளவுகோல்கள் துல்லியமானவை ……

Posted by அகத்தீ Labels:

 


எனது அளவுகோல்கள் துல்லியமானவை ,சரியானவை ,தரமானவை ,புனிதமானவை ,நியாயமானவை ; என்ன செய்வது ? அதனைக் கொண்டு  அளக்கும் போது யாருமே உருப்படியாக  இல்லை ; ஆனாலும் எனது அளவுகோல்கள் துல்லியமானவை ……

 

நான் இந்த இருட்டைக் கடந்தாக வேண்டும். அடர்ந்த காட்டைக் கடந்தாக வேண்டும் ..அந்த காட்டாற்று வெள்ளத்தைக் கடந்தாக வேண்டு . சுடு பாலையைக் கடந்தாக வேண்டும் .மலை முகட்டில் ஏறியாக வேண்டும் .இறுதிவரை பயணிக்க துணிவு கொண்டோர் மட்டுமே என்னோடு வருக ! யாரும் வரவில்லையா ? சரி, தனியாக நான் இந்த ….

 

நான் சுத்தமானவன் , கொள்கை உறுதியானவன் , சமரசம் என் அகராதியிலேயே இல்லை . எல்லா சூத்திரங்களும் எனக்கு அத்துப்படி . மூலநூலில் இருந்து மில்லி மீட்டர் நகர மாட்டேன் .காலுக்கடியில் பூகம்பமா ? எரிமலையா ? எனக்கு கவலை இல்லை .நான் சுத்தமானவன்….

 

எனது அளவுகோல்கள் துல்லியமானவை ,சரியானவை ,தரமானவை ,புனிதமானவை ,நியாயமானவை ; என்ன செய்வது ? அதனைக் கொண்டு  அளக்கும் போது யாருமே உருப்படியாக  இல்லை ; ஆனாலும் எனது அளவுகோல்கள் துல்லியமானவை ……

 

[ சமூக வலைதள அக்மார்க் நியாய தராசான்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பதால் ஏற்பட்ட எதிரொலி ]

 

சுபொஅ.

8/11/2023.


0 comments :

Post a Comment