பார்வைக் கோளாறு

Posted by அகத்தீ Labels:

 

பார்வைக் கோளாறு

 

இலவசங்கள்

நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்டன .

மூச்சைப் பிடித்து பேசியவன்தான்

இலவசத்தை முதலில் பெற

முண்டியடிக்கிறான்.

 

ஊழலால்தான்

நாடு கெட்டுவிட்டதென

நாப்பறை கொட்டுகிறவன்தான்

லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க

ஊருக்கு முந்தி புறப்படுகிறான் .

 

குடியால்தான்

குடிமுழுகிப் போய்விட்டதென

தலையில் அடித்து சத்தியம் செய்தவன்தான்

வீட்டுக்கு போகையில் மறக்காமல்

மதுபாட்டில் வாங்கிச் செல்கிறான்.

 

எல்லா அளவுகோல்களும்

இங்கே பேசமட்டும்தான்

தனக்கென வந்திடில் தனியொரு நியாயம்

பகலில் பசுமாடும் கண்ணுக்குத் தெரியாது

இருட்டினிலும் எருமையைத் தேடுவான்.

 

சுபொஅ.

8/6/2023.

 

 

0 comments :

Post a Comment