“வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கிறது.

Posted by அகத்தீ Labels:

 

 “வைத்த பொருள்

வைத்த இடத்திலேயே

இருக்கிறது.

 

தரையில் எதுவும்

இறைந்து கிடக்கவில்லை.

 

வண்ணக் கலவை பூஸ்ட்

சாக்கலேட் ,சாம்பார் கறை எதுவும்

தரை முழுக்க இல்லை.

 

 ஷோபா ,கட்டில்

ஒழுங்கு குலையாமல்

அப்படியே இருக்கிறது.

 

அவிழ்த்துப் போட்ட

ஜட்டி டவுசர் டீ ஷர்ட்

கவுண் நாற்காலிகளில்

தொங்கவில்லை

 

கூச்சல் இரைச்சல்

மிரட்டல் அழுகை சிரிப்பு

விளையாட்டு ,சண்டை

துளைக்கும் கேள்விகள்

எதுவும் இல்லை.

 

பேரன்கள் பேத்திகள்

வெளிநாடு போனதால்

சூழும் அமைதி

சுத்தமாக பிடிக்கவில்லை.

 

அவர்களுக்கு பிடித்த

கதைகளோடு காத்திருக்கிறேன்.”

 

சுபொஅ.

15/06/2023.


0 comments :

Post a Comment