நூலாம்படை என அதற்கு பெயர் வைத்தது யாரோ ?

Posted by அகத்தீ Labels:

 

நூலாம்படை என அதற்கு பெயர் வைத்தது யாரோ ?

 

 


கடந்த சில நாட்களாக என் எல்லா புத்தகங்களையும் பரணில் இருந்தும் ஷெல்பிலிருந்தும் இறக்கி - அடைந்து கிடந்த தூசிகளை ஒட்டடைகளை அல்லது நூலாம்படைகளைத் தட்டித் துடைத்து - வகை ,தேவை வாரியாக அடுக்கி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது .

 

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் , அவில் மாத்திரை போட்டுக்கொண்டும் தும்மலும் சளியும் . என்ன செய்வது ? தவிர்க்க முடியாதுதானே !

 

சுமார் 600 புத்தகங்களுக்கு மேல் மூட்டை கட்டி ஓசூர் ,கிருஷ்ணகிரி கட்சி நூலகங்களுக்கும் வேறு நூலகங்களுக்குமாய் நேற்று [17/4/2022] அனுப்பி ஆயிற்று .அவற்றை தக்க விதத்தில் பிரித்து வழங்கிட அறிவியல் இயக்கத் தோழர்கள் சிவகுமாரும் ,சேதுராமனும் பொறுப்பேற்று பெற்றுச் சென்றுள்ளனர் . மகிழ்ச்சி ! அவர்களுக்கு நன்றி !

 

பல வருடங்களுக்கு முன் வடபழனி பகுதிக்குழு செயலாளர் தோழர் ராமச்சந்திரன் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பெற்றுச் சென்றார் .

 

அதன் பின் ஒரு முறை சுமார் எழுநூறு புத்தகங்களை திருவள்ளூர் கட்சி மாவட்ட நூலகத்துக்காக தோழர் ராஜேந்திரன் பெற்றுச் சென்றார் .

 

மூன்றாவது முறையாக நேற்று சுமார் 600 புத்தகங்களுக்கு மேல் வழங்கிவிட்டேன் .

 

இன்னும் சுமார் இருநூற்றி ஐம்பது புத்தகங்கள் மட்டுமே என் புத்தக அலமாரியில்….

 

இன்னொரு முறை இப்படி புத்தகங்கள் வழங்க காலம் வாய்ப்பு வழங்குமோ ? என் சந்ததியர் மிச்சம் மீதி இருப்பதை அள்ளிக் கொடுப்பார்களோ ? எல்லாம் காலத்தின் கையில்…

 

புத்தகங்களை வாங்குவதைவிட மிகச் சிரமம் அதைத் தொடர்ந்து பராமரிப்பதே ! தூசும் நூலாம்படையும் மிகப்பெரிய சவால் .இடப் பிரச்சனை இன்னொன்று .

 

புத்தகங்களால் செல்லச்சண்டை வராத வீடு ஒன்று உண்டோ ?

 

ஒரே ஒரு சந்தேகம் :

நூலாம்படை என அதற்கு பெயர் வைத்தது யாரோ ? ஏனோ ?

 

 

சுபொஅ. 18/4/2022.

0 comments :

Post a Comment