பொறியில் சிக்கிய எலியென

Posted by அகத்தீ Labels:

 

எங்கும் ஒரே புழுக்கம்

வெக்கை தாள முடியவில்லை

காற்று மருந்துக்கும் இல்லை

மூச்சுத் திணறுகிறது

கதவு ஜன்னல் என

ஒவ்வொன்றாய் சாத்துகிறார்கள்

ஆங்கார சிரிப்பொலி அச்சுறுத்துகிறது

பொறியில் சிக்கிய எலியென

கொண்டாட்டித் தீர்க்கிறார்கள்

கடவுளும் கார்ப்பரேட் வசமாகிவிட்டார்

நமக்கு நாமே துணை

நாம் பலர் அவர் சிலர் !

இனியும் கதவைத் தட்டிக்கொண்டிருக்க

முடியாது… உடைத்தெறி !

 

சுபொஅ.

18/11/2021.

0 comments :

Post a Comment