ஞானியாவதற்கு அல்ல………..

Posted by அகத்தீ Labels:

 ஞானியாவதற்கு அல்ல………..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் படிக்கும்போதும் இதை இவ்வளவு நாள் அறியாமல் இருந்தோமே என நினைத்துக் கொள்கிறேன் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் செயலையோ எதிர்வினையையோ பார்த்து நாம் இன்னும் பட்டுத் தெளிய வேண்டியது நிறைய இருக்கிறது என கருதிக் கொள்கிறேன்.
அனுபவும் அறிவும் ஒற்றை நாளில் யாருக்கும் வந்து விடுவதில்லை ; ஒவ்வொரு நாளும் பட்டறிவும் படிப்பறிவும் புதுப்புதுப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
முதியோரிடம் கற்பதற்கு நிறைய செய்திகள் இருப்பது போலவே , இளைஞர்களிடமும் இருக்கிறது . ஆனால் ,இரு பக்கமும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தேவைக்கு ஏற்ப இல்லையே !
ஞானியாவதற்கு அல்ல மனிதனாவதற்கே இங்கு பெரும்பாடாய் இருக்கிறதே ! என்ன செய்ய ?
சுபொஅ
12/11/2021

0 comments :

Post a Comment