எங்கே போகிறாய் ? எங்கே போகிறாய் ?

Posted by அகத்தீ Labels: ,

 

எங்கே போகிறாய் ? எங்கே போகிறாய் ?

மனிதா ! மனிதா ! நீ - எங்கே போகிறாய் ?

                             [எங்கே..]

 

 

வெறுப்பை விதைக்கிறாய் வினையை அறுக்கிறாய்

பொறுப்பை மறக்கிறாய் பொல்லாங்கு நினைக்கிறாய்

அடுப்பை அணைக்கிறாய் வீட்டை எரிக்கிறாய்

மனிதம் சிதைக்கிறாய் மதத்தில் புதைகிறாய்

 

                                     [எங்கே..]

 

விரல்நுனியில் உலகம் விஞ்ஞானத்தில் உயர்ந்தாய்

விரல்நுனியால் விஷத்தை அமுதசுரபியில் கலந்தாய்

கலகவிதையை கணினி மூலமும் விதைத்தாய்

பொய்யையை நம்பிநம்பி மானுடத்தை தொலைத்தாய்

 

                                     [எங்கே,,,]

 

தலைக்குமேலே வெள்ளம் சிக்கிநீயும் தவித்தாய்

தப்பவழி தெரியாமலே சங்கடத்தில் முழித்தாய்

காப்பாற்ற சாமிகீமிவரலை நெஞ்சுடைந்து நின்றாய்

தோழமையின் போர்முரசை வெகுதொலைவில் கேட்டாய் !

 

                                                [ எங்கே…]

 

சுபொஅ.

4/10/2021.

 

 

 

 

 

0 comments :

Post a Comment