இடைவெளி

Posted by அகத்தீ Labels:









இடைவெளி


சொல்லப்படாத ரகசியம்
எல்லோரிடத்திலும் எப்போதும்
எங்கும் இருக்கிறது

சொல்லப்பட்டவை
ஒரு போதும் முழுமை அல்ல
பகுதி அல்லது அதினினும் குறைவு

சொல்ல நினைத்ததையும்
முழுவதும் சொல்லிவிட
சொற்கள் அகப்படுவதுமில்லை .

சொல்லாமல் விடுபட்டவை எல்லாம்
வேண்டுமென்றே
விடுபட்டவையாகவும் இருக்கலாம்

சொல்ல முயன்றும்
தற்செயலாகவும்
விடுபட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

சொன்னவை ஒவ்வொன்றுக்கும்
முன்கதையும் பின்கதையும்
தொடர்ந்தபடியே இருக்கும்

சொல்லுகிற ஒவ்வொன்றிலும்
உள்ளொன்று வைத்து வெளியொன்று
என்பது எப்போதும் எங்கும்


சொல் மென்மையோ வன்மையோ
வர்க்க நலனும் வர்ண நலனும்
பொதிந்ததே என்பதே மெய் !!!!!


சு.பொ.அகத்தியலிங்கம்.
4 ஜூலை 2019 .





1 comments :

  1. ரமேஷ்/ Ramesh

    கவிதை நன்றாக இருக்கிறது.

Post a Comment