முதலில் அதற்குப் பதில் சொல் !!!

Posted by அகத்தீ Labels:

முதலில் அதற்குப் பதில் சொல் !!!
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ நடக்கிற சாலை… இனி நீஅதில் நடக்காதிருப்பாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ உடுத்துகிற உடை… இனி உடை உடுத்தாமல் அம்மணமாய் அலைவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ பயணிக்கும் வாகனம் … இனி அதில் பயணிக்காமல் புஷபவிமானத்தை தேடுவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவும் .. இனி உண்ணா நோன்பு இருப்பாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
உன் நோய் தீர்க்கும் மருந்து … இனி கோமூத்திரமே கதியென நோயில் அழுந்துவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளும் … இனி எதையும் பயன் படுத்தாமல் தன்னந்தனியாய் பசியோடும் நோயோடும் பஜகோவிந்தம் பாடுவாயாக
நீ அகோரியோ ,துறவியோ, யோகாவியாபாரியோ , இந்து புனிதரோ யாராக வேண்டுமானாலும் இரு …
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர்,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர்,இதரர் என்போர் வியர்வையில் நனையாத மூளையில் யோசிக்காத ஏதேனும் ஒற்றைப் பொருள் இருக்குமாயின் அதனைத் தாராளயாய்ப் பயன்படுத்திக் கொள்ள சாஸ்திரம் தடைவிதிக்கவில்லை .
எல்லோரையும் தீண்டிவிட்டு உன்னிடம் வரும் காற்றை நீ எப்படித் தடுக்கப் போகிறாய் … முதலில் அதற்குப் பதில் சொல் !!!!!
சு.பொ.அகத்தியலிங்கம்
1 ஆகஸ்ட் 2019.

0 comments :

Post a Comment