ஆராதிக்கப்படும் பொய்

Posted by அகத்தீ Labels:



ஆராதிக்கப்படும் பொய்




உண்மை பொய் என தினம் தினம்
நிறைய பேசிச் சலித்துவிட்டோம்
உண்மையில் உண்மையைத் தேடுபவரா நீங்கள்
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் !

புராணப் பொய்களை நம்புகிறீர்கள்! கும்பிடுகிறீர்கள்!
சோதிடம் ,ஜாதகம், வாஸ்து என
பொய்யில் கட்டப்பட்ட அனைத்தையும்
ஆராதித்து கொண்டாடுகிறீர்கள் !

விளம்பரப் பொய்களில் வெறிகொண்டு வீழ்கிறீர்கள்
அரிதாரப் பொய்களில் மனதை இழக்கிறீர்கள் !
சாதி,மதப் பொய்களுக்காய் சண்டையிட்டு மாய்கிறீர் !
கல்யாணத்துக்காய் சொன்ன கணக்கில்லா பொய்கள் !

நிதானமாய் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
வாழ்க்கை நெடுக பொய்களுக்கே ஒப்புக்கொடுக்கிறீர்கள்!
திடீரென்று மெய்மட்டுமே பேசும் தலைவர் வேண்டுமென்றால்
எப்படி கிடைப்பார் ? எங்கு கிடைப்பார் ?

0 comments :

Post a Comment