எங்கு நோக்கினும்
எல்லா நேரமும்
எல்லா சாலைகளையும்
உடைத்துக்
கொண்டே இருக்கிறார்கள் .
ஏதோ ஒரு காரணம்
சொல்வதற்கு
இருக்கிறது .
குழந்தைகளும்
முதியவர்களும்
வாகனம் ஓட்டிகளும்
அர்ச்சனை
செய்யாத நாளில்லை .
தூசும் தும்பும்
எல்லோரையும்
தும்மவிட்டு
வேடிக்கை பார்க்கிறது !
சாலை போடும்
முன்பே
எல்லா குழாய்களையும்
தண்டுவடங்களையும்
புதைக்க ஒரு
வழிவகை செய்யக்கூட
உங்கள் திட்டமிடலில்
இடமில்லையா ?
கோளாறு மூளையிலா
?
பண ஆசையிலா
?
சுபொஅ.
01/03/25.
0 comments :
Post a Comment