பாவங்கள்
செய்வது பாவமல்ல
பரிகாரம்
செய்யாமலிருப்பதுதான் பாவம் !
ஞாயிறு தோறும்
பாவமன்னிப்பு
கேட்கலாம் …
எப்போதாவது ஒரு முறை
மகா கும்பத்தில்
முங்கி எழுந்தால்
மூன்று ஜென்ம
பாவமும்
முற்றாகத்
தொலையும்
மண்டியிட்டு
தொழுது மன்றாடினால்
பாவம் கரைந்தே
போகும்
பாவங்கள்
செய்வது பாவமல்ல
பரிகாரம்
செய்யாமலிருப்பதுதான் பாவம்!
புரியவில்லையா
?
பாஷ்யம் சொல்கிறேன்
..
அட ! விளக்கம்
சொல்கிறேன் அப்பு !
ஊழல் செய்வது
பாவமல்ல
ஊழல் செய்தோர்
பாஜகவில் சங்கமிக்காதிருப்பதே பாவம் !
மதக் கலவரம்
செய்வது பாவமல்ல
மதக்கலவரம்
செய்வோர்
‘ஜெய் ஸ்ரீ
ராம்’ சொல்லாதிருப்பதே பாவம் !
தேசத்தை சூறையாடுவது
பாவமல்ல
சங்கி சாக்கடையில்
பன்றியாய்
கிடந்து மகிழாமல்
இருப்பதே பாவம் !
முட்டாளாய்
இருப்பது பாவமல்ல
சனாதனத்தை
மூச்சுக்கு முன்னூறு முறை
வியந்தோதாது
இருப்பதே பாவம் !
பாவங்கள்
செய்வது பாவமல்ல
பரிகாரம்
செய்யாமலிருப்பதுதான் பாவம் !
சுபொஅ.
23/02/25.
0 comments :
Post a Comment