மகாராஜா ஏன் அழுதார் ?

Posted by அகத்தீ Labels:

 


மகாராஜா ஏன் அழுதார் ?
ஊரெங்கும் இதே கேள்வி
கண்ணில் தூசி விழுந்ததால் என
அதிகாரி சொன்னார்
ஆனந்தக் கண்ணீர் என
விதூஷகன் சொன்னார்
தேஷ்பக்தி என்று
சங்கீஸ் உபந்யாசம் செயதனர்
மகாராஜா தனக்குள் சொல்லிக்கொண்டார் ;
“ என் வேதனை எனக்கு
நான் வன்முறையைத் தூவுகிறேன்
ஆனாலும்
நான் அனுபிய பஜ்ரங் சேனையைத் தவிர
யாரும் வன்முறையை நேசிக்கவில்லையே!
நான் எங்கும் வெறுப்பை விதைக்கிறேன்
ஆனாலும்
அன்பின் பரப்பு எப்படி விரிகிறது?”
அருகில் இருந்த அழுக்கு மூட்டை சொன்னது
“ மகாராஜா ! நாம் எதைச் சொன்னாலும்
மக்கள் எள்ளி நகையாடுகின்றனரே !
பேசாமல் ! சிரிப்பதற்கு
தடை போட்டு விடலாமா ?”
“ போயா ! நீயும் உன் யோசனையும்
நம்ம நிதி மந்திரி வரி போட்டபின்
எவன் சிரிக்கிறான் எங்கு சிரிக்கிறான்
நம் நண்பர்கள் ஓரிருவரைத் தவிர…”
மகாராஷாவும் அழுக்கு மூட்டையும்
கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்தனர் …
ஊர் சிரித்தது …
சுபொஅ.
17/8/2023.
All reactions:
You, Chinniah Kasi, பா. ஜீவ சுந்தரி and 116 others

1 comments :

  1. Avargal Unmaigal


    அருமை

Post a Comment