கண்களை இடுக்கி நினைவுத் திரையில்...

Posted by அகத்தீ Labels:

 

கண்களை இடுக்கி
நினைவுத் திரையில்.....
என் வாழ்க்கையில் இதுவரை
அறுபத்தி ஒண்பது
புத்தாண்டுகள் கடந்துவிட்டன.
[பிறந்த நாளல்ல]
இன்னும்
ஐந்து நாட்களில் எழுபதாவது
புத்தாண்டும் வந்துவிடும்..
கண்களை இடுக்கி
நினைவுத் திரையில்
உற்று உற்று பார்க்கிறேன்
எட்டிய வரையில்…
வயது கூடின
அனுபவங்கள் கூடின
காயங்கள் கூடின
அவ்வப்போது தலைநீட்டிய
நம்பிக்கை ரேகைகளை
கவலையும் நாளைய பயமும்
அரித்துத் தின்றன…
இடுக்கண் வருங்கால்
நகைத்தேன்
அடுத்து அதனினும் பெரிது
வரும் என்பதறியாமலே !
அழிய வேண்டிய
மதமும் சாதியும்
வெறியோடு ஆட…
வளரவேண்டிய
மனிதமும் ஒத்துழைப்பும்
நாளும் கரைய….
பாதுகாக்க வேண்டிய
இயற்கையும் காதலும்
ஆபத்தில் உழல…
ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய
அறிவு பதுங்குகுழி தேட
போராட உயர வேண்டிய கரங்கள்
செய்வதறியாது பிசைந்து நிற்க
பாசிசமும் சர்வாதிகாரமும்
மமதையோடு சிரிக்கிறது …
நேரடி அனுபவத்திலும்
வரலாற்றின் நெடிய அனுபவத்திலும்
உரக்கச் சொல்லுவேன்…
உறுதியாய்ச் சொல்வேன்…
விடியாத இரவொன்றுமில்லை
முடியாத துயரொன்றுமில்லை
தகராத சிம்மாசனங்களில்லை
மாறதது எதுவும் இல்லை! இல்லை!!
சு.பொ.அ.
26/12/2022.

0 comments :

Post a Comment