உங்கள் கண்ணீரில்

Posted by அகத்தீ Labels:

 


உங்கள் கண்ணீரில்




உங்கள் கண்ணீரில்
உப்பில்லை
ஈரமில்லை
வருத்தமில்லை
ஆனாலும் நீங்கள்
அழுகிறீர்கள் ! – அது

கார்ப்பரேட் அழுகை
விவசாயிகளின் மீதான
கரிசனத்தால் நீங்கள்
அழவில்லை !
போராட்ட நெருப்பை
அணைக்க அழுகிறீர் !
மன்னிக்கவும்
அழுவதுபோல் நடிக்கிறீர் !
உங்கள் அழுகை தொழுகை
எல்லாமும் மகாநடிப்பே !

மோடிஷா !
உங்களை நான் மட்டுமல்ல
ராமன் ,சிவன் ,முருகன் ,துர்க்கா
அல்லா ,ஏசு ,சீக்கிய குரு நானக் ,
சத்புருஷர் ,மகாவீர்
உட்பட எந்தக் கடவுளும்
கடவுளின் தூதரும்
நம்பமாட்டோம் !

போராடும் விவசாயிகளே!
உங்களுக்கே
எங்கள் ஆசீர்வாதங்கள்!!!!

ஏனெனில்
நாங்கள் இருப்பதே
உழைப்பாளிகள்
வியர்வையில்தானே!

சுபொஅ. 

0 comments :

Post a Comment