இன்னும் என்ன தயக்கம்?

Posted by அகத்தீ Labels:

இன்னும் என்ன தயக்கம்?


நம்பிக்கை அளிக்கும் மெய்யான மாற்றுக்காக
காத்திருக்கிறார்கள் மக்கள்.

பொறுமை எல்லைகடந்து சென்றுகொண்டிருக்கிறது.

வாழ்க்கை சகிக்கமுடியாததாக மாறிக்கொண்டிருக்கிறது.

சுனாமியாய் சுழற்றப்படும் தாராள பற்சக்கரத்தில் சகலமும் பிழியப்பட்டு சக்கையாய் வீசிஎறியப்படுறது மனிதம்.

அச்சு முறிந்துவிட்டது.வண்டி குடைசாய்ந்து விட்டது.நாலாபக்கமும்
மனிதர்கள் தூக்கி எறியப்படுகின்றனர்.

தேவதூதன்களும் ஆபாத்பாந்தவன்களும் அவதரிப்பது காவியங்களிலும் கற்பனைகளிலும் மட்டிலுமே.

சுழன்றடிக்கும் காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டது மனிதம்.மீட்பர்களைக் காணோம்.

எங்கும் கும்மிருட்டு.எங்கும் அபயக் குரல்.இப்போது ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சப் போவது யார்?

கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் கப்பலை கரை சேர்க்கும் மாலுமி யார்? திசைகாட்டும் கருவி எங்கே?

நேற்றின் அழுக்குகளை அலச இதுவல்ல நேரம்.தத்துவம் பேசவோ
போதனைகள் செய்யவோ அவகாசம் இல்லை.

காலம் விரைந்து கொண்டிருக்கிறது.எல்லாம் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது.எங்கும் ஒரே அழுகை.

என்ன யோசனை?இன்னும் என்ன தயக்கம் ?பிரளயமாய் எழுங்கள்.கோட்டைகளும் கொடிமரங்களும் மூழ்கட்டும்

நம்பிக்கை அளிக்கும் மெய்யான மாற்றுக்காக
காத்திருக்கிறார்கள் மக்கள்.

-சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment