அசோகனின்காதலி தமிழச்சி

Posted by அகத்தீ


அசோகனின்காதலி தமிழச்சி
- சு.பொ. அகத்தியலிங்கம்
 
காருவகி
ஆசிரியர்: இளவேனில்,
வெளியீடு : கொற்றவை, 4, சுந்தரம் தெரு, நடேசன் பூங்கா அருகில், தியாகராய நகர், சென்னை - 600 017,
பக்: 256, விலை: ரூ. 140/

நெடுநாட்களுக்குப் பிறகு இள வேனிலின் கவிதை கொஞ்சும் எழுத் தோவியத்தை “காருவகி” வரலாற் றுப் புதினத்தில் சுவைக்க இனிக் கிறது.“அசோகனோடு கலிங்கப் போரில் போரிட்டது யார்?” தோற் றத்தில் மிக எளிமையாகக் காட்சி அளிக்கும் இக்கேள்வி மிகப் பெரும் வரலாற்றுச் சிக்கலை உள்ளடக்கி உள்ளது. அதை அவிழ்க்க இளவே னிலுக்கு துணைவருகிறார் பன் மொழிப்புலவர் அப்பாதுரையார். “செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி” “பாழிக்கோட்டை” “வம்ப மோரியர்” என்ற சொற்களை பகுத் தாய்ந்து கலிங்கப்போரில் அசோக ரோடு பொருதியது இளஞ்சேட் சென்னியே என்கிற முடிவுக்கு வருகிறார்.
அத்துடன் அசோகனின் காதலி காருவகி தமிழ்ப்பெயரே என தமிழண்ணல் கொடுத்த விளக்கமும் தோள்கொடுக்க, இளவேனிலின் தத்துவ, அரசியல் பார்வை உடன் சேர; கற்பனையில் மலர்ந்துள்ளது இந்த வரலாற்றுப் புதினம்.

இந்த நாவல் நெடுக புத்தனின் பெருமைகளும் சனாதன பிராமணி யத்தின் சிறுமதிகளும் சூழ்ச்சிகளும் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கௌடில்யரின் குரூர வர்ணாஸ்ரம வெறியை - சனாதன சாம்ராஜ்யம் சமைக்க மேற்கொள்ளும் யுத்தியை வலுவாக தோலுரிக்கிறார் இளவே னில். அதேசமயம் கௌடில்யரின் மறுபக்கமாக - அவருக்கு தாழ்வு மனப்பான்மையில் தோன்றிய குரூர வெறி என நியாயம் கற்பிக்கும் ஒரு கிளைக் கதை விரிக்கிறார்.

மருத்துவர் நெல்லியங்கோடு, திரையன், அன்னிமிஞிலி, உலும் பினி, உபகுப்தர், பசுங்குடையார் என நம் நெஞ்சைக் கொள்ளை கொள் ளும் பாத்திரங்களை உயிரோடு உலவவிட்டுள்ளார். தமிழச்சி அன்னி மிஞிலி அசோகன் காதலியாக வந்து வரலாற்றையே தடமாற்றம் செய்வ தும் ருசிக்கத் தகுந்த பகுதிகள்.

“இன் றைய உலகில் ஒருவன் உயிரை விட்டு விடலாம். அரசியலை விட்டு ஒதுங்கி விட முடியாது. எனக்கு அரசியலே இல்லை என்பது கூட ஒரு வித அரசி யல் தான்” என உரையாடல்கள் ஒவ் வொன்றிலும் இளவேனில் முகம் காட்டுகிறார்.“தவறான மனிதன் கூட தன்னல மற்றவனாய், பணத்தாசையற்றவ னாய் இருந்தால், தலைவனாக மதிக் கப்படுவான்”.
“எத்தனை அறிவாற்றல் மிக்க தலைவனாக இருந்தாலும் சுகங்க ளில் சொக்கிப் போனால், தன் பிள்ளை, தன் குடும்பம் என்று சுருங் கிப் போனால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து போவான்.”“கொலுமண்டபத்திற்கு வந்தா லும், வாழ்க! கொலைக் களத்திற்கு வந்தாலும் வாழ்க! சாமி கும்பிட வந்தாலும் வாழ்க! தாசியுடன் புரளப் போனாலும் வாழ்க! உங்களை வாழ்த் தியே மொழிகளெல்லாம் நாறிப் போச்சு!இப்படி நாவலில் சுழலும் உரை யாடல் சவுக்குகள் பல நிகழ்கால அரசியலுக்குக் கச்சிதமாகப் பொருந் துகின்றன. அங்கே தான் இளவேனில் நிற்கிறார்.

அசோகனின் தாய் என்பதும்? அவள் நாவிதச்சி என்பதும்? கௌ டில்யரின் தந்தையார் என்பதும்? அவர் சூத்திரன் என்பதும் நாவலின் முக்கியச் செய்தி. சாதிவெறியும் சிம்மாசன வெறியும் சூழ்ச்சிவலை யும் மிக்க மகத சாம்ராஜ்யமும், அதற்கு நேர் எதிராக அருங்குணங்க ளின் ரோல்மாடலாய் தமிழ் மன்னர் களையும் எதிர் எதிரே நிறுத்தி இள வேனில் நாவலை நகர்த்துகிறார்.


இதற் கான வரலாற்று ஆதாரங்களைக் காட்டிலும் இலக்கிய ஆதாரங்கள் சார்ந்தே நாவல் பின்னப்பட்டுள்ள தால் இந்நாவல் புதிய விவாதத்தை முன்னெடுக்கிறது.வரலாற்றின் இருண்ட தாழ்வாரங் களில் கைவிளக்கேற்றி அலைந்து உண்மையை வெளிக்கொணர பெரு முயற்சி தேவை. அவற்றில் பிழை நேரலாம். விவாதம் சூடு பறக்கலாம். புதிய ஆய்வுக்கு வித்திடலாம். ஆனால் உண்மையைக் கண்டடைய வேறு ராஜபாட்டை இல்லையே - படிக்க விவாதிக்க வேண்டிய நாவல்.









 
 

0 comments :

Post a Comment