வாழ்வின் விதிகளையும்தான்.

Posted by அகத்தீ Labels:

 


வாழ்வின் விதிகளையும்தான்.

 

 

கறாரான சூத்திரங்களுக்குள்

அடங்குமோ வாழ்க்கை ?

சாத்தியமே இல்லை!!

 

பந்தயக் குதிரையோ !

பாரம் சுமக்கும் கழுதையோ!

வாழ்க்கையை எதுவென்பாய் ?

 

திட்டமிட்டதை மீறாமல்

வீட்டை கட்ட முடியுமோ !

வாழ்வை நகர்த்த முடியுமோ !

 

சாலை விதிகளை மதிப்பதை

நீ மட்டுமே செய்ய முடியுமோ !

வாழ்வின் விதிகளையும்தான்.

 

உன் வாழ்வு உன் கையில்தான்

உன் கையை பிணைத்திருப்பவற்றின்

கட்டளையை மீறல் எளிதோ ?

 

அனுபவத்துக்கு மிஞ்சிய ஆசானும் இல்லை

எல்லா அனுபவமும் ஒன்றாகவும் இல்லை

அவரவருக்கானதுதான் அனுபவம்கூட.

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

5/11/2022.

0 comments :

Post a Comment