சும்மா…. சிரிக்க மட்டுமே !

Posted by அகத்தீ Labels:

 





சும்மா…. சிரிக்க மட்டுமே !

 

என் பெயர் வடை

இட்லிக்கு முன் பிறந்தவன்

சந்தேகம் இருந்தால்

மருத்துவர் கு. சிவராமனைக் கேளுங்கள்

 

டீ ,காபி, இட்லி, பொங்கல்,

கேசரி, உப்புமா, தோசை

இப்படி என் சிநேகிதர்கள் அதிகம்.

என்னை வெறுப்போர் குறைவு

 

ஆமவடை ,உழுந்த வடை ,பருப்பு வடை

மெதுவடை ,மசால்வடை ,தவலைவடை ,

கீரைவடை , தட்டுவடை, அனுமார் வடை

தயிர்வடை ,ரசவடை ,சாம்பார்வடை

எத்தனை பெரிய குடும்பம் எனக்கு

எல்லா மதத்தவரும் சாதியினரும்

என் ஆசை உறவுகளே!

 

 

நான் எண்ணை குடித்தால்

தந்தி பேப்பரில்  பிழிந்து

தின்று விடுவார்கள் ஒரு போதும்

குப்பையில் போடமாட்டார்கள் !

 

ஒருத்தர் தினசரி

மாவும் எண்ணையும்

அடுப்பும் இல்லாமலே

வாயால் சுடுகிறார் வடை

எம் வம்சத்துக்கு நீங்கா

பழியை சுமத்தி மகிழ்கிறார் .

 

ச்சீ ! ச்சீ !

வாயால் சுடுவது வடையல்ல

வயிற்றை நிறைப்பதே வடையாகும் !

வடையின் வலியை புரிந்திடுங்கள்!

அந்த ’ச்சீ’ யின் வாயை தைத்திடுங்கள்!

 

சுபொஅ.

04/03/24


0 comments :

Post a Comment