பிடிக்காமலே போகுமோ !

Posted by அகத்தீ Labels:




பிடிக்காமலே போகுமோ !


இருட்டில் வாழப்பழகு
உனக்கு
வெளிச்சம் பிடிக்காமலே போகும் !

இரைச்சலில் வாழப்பழகு
உனக்கு
அமைதி பிடிக்காமலே போகும் !

நாற்றத்தில் வாழப்பழகு
உனக்கு
நறுமணம் பிடிக்காமலே போகும் !

அடிமைச்  சேற்றில் அமிழ்ந்து பழகு
உனக்கு
சுதந்திர வெளி பிடிக்காமலே போகும் !

[ சத்தியமாய் இது அரசியல் கவிதை இல்லேன்னு நீங்க நம்பத்தான் வேணும் ]

இருட்டிலேகூட
மெல்ல மெல்ல
ஒவ்வொன்றாய் தட்டுப்படும் !

இரைச்சலில்கூட
கொஞ்சம் கொஞ்சமாய்
சப்த பேதம் கேட்கலாகும்!

நாற்றத்தில்கூட
போகப்போக
மணத்தை உணரலாகும்!

அடிமையில் சுகங்கண்டோர்
நொடிப்பொழுதேனும்
விழிப்பரோ சொல்வீர் ?
[ இதுவும் அரசியல் கவிதை அல்ல நம்புங்கள் ]

0 comments :

Post a Comment