யோகா செய்தால் பசி எடுக்காதா ?

Posted by அகத்தீ Labels:




யோகா செய்தால் பசி எடுக்காதா ?

சு.பொ.அகத்தியலிங்கம்
 
யோ கா , பிராணாயாமம், தியானம் இவை சர்வ ரோக நிவாரணியாக தற்போது விற்கப் படுகிறது . பரபரப் பும் பதற்றமும் மிகுந்த இன்றையச் சூழலில் இவற்றின் அவசியத்தை யாரும் குறைத்து மதிப்பிட இயலாது; ஆனால் இவை குறித்த பார்வை மிகவும் பழுதுபட்டதாக உள்ளது. ஆன்மிக மத மயக்கம் தருவதாக வும் ஃபேக் சயின்ஸ் என ஆங்கிலத் தில் அழைக்கப்படும் போலி அறி வியல் சாரத்தோடும் சந்தைப்படுத் தப்படுகிறது. யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை என்கிற இந்த நூல் அதற்கு மிகச் சிறந்த உதாரண மாக உள்ளது.

யோகா என்பது உடற்பயிற்சி போன்றதே, ஆனால் இது உள் ளுறுப்புகளுக்கான பயிற்சி. இது பிராணாயாமம் எனப்படும் மூச் சுப்பயிற்சியோடு இணந்தது. தியானம் எனப்படுவது உள்ளத்தை அதாவது சிந்தனையை ஒருமுகப் படுத்தும் பயிற்சியாகும். இவை அனைத்தும் உடல் நலனுக்கு அவ சியமானது.

இதில் யாருக்கும் ஐய மில்லை . இது அனைத்து பிரிவு மக்களுக்கும் உரியதாகும். ஆனால் இதனை மதத்தோடு சேர்த்து பிசை வது தேவையற்றது. பொருளற்றது.இந்நூலில் முன்னுரை தொடங்கி முதல் எட்டு அத்தியாயம் முடிய 47 பக்கங்கள் பார்வைக்கோளாறு மிகுந்தவை யாகவே உள்ளன.

யோகா கடவுள் நம்பிக்கையற்றவர் களுக்கு கடவுள் நம்பிக்கையளிப்ப தாகக் கூறுவதும்; இந்து தர்ம நெறி களைக் கொண்டு அமையப் பெற்ற தாகக் கூறுவதும்; ஆத்ம தரிசனம், ஆன்மிகத் தேடல் என்றெல்லம் ஜோடனை செய்வதும் அனைத் துப் பகுதி மக்களும் இதனை பயில மனத் தடைகளை உருவாக்கி விடும்.


பசிக்கும் பொழுது உணவு கிடைக்காமல் போனால் தொண்டை குழியில் சம்யமம் செய்தால் பசிதாகம் அற்றுப் போய் விடுகிறது (பக்கம் 27 ) தாரணை, தியானம் , சமாதி மூன்றும் சேர்ந்தால் சம்யமம் என்கிறார் நூலாசிரியர். இந்த வாதம் பகுத்தறிவுக்கு உகந்ததா? பசிப்பிணிக்கு இது தீர்வாகுமா?

அதுபோல், இறையரு ளையும், உலகில் பொருளையும் ஒருங்கே பெற யோகாசனக் கலை மிகவும் உதவும் ( பக்கம் 11) என்கிறார். யோகா உடல் நலம் சார்ந்தது . அதற் கும் மேல் பொருளீட்ட உதவும் என்பது எப்படி சரியாகும் ? நூலாசிரியர் யோகா பயிற்சியளிப்பதன் மூலம் பொருளீட்டலாம் ; ஆனால் அது பொது நியதியாக முடியாது . மனம் புருஷனில் அடங்காத பூவை பெண் போல என்றும் , பரமார்த்திக வாழ்வு எனப்படும் பகுத்தறிவுக்கு அப்பாற் பட்ட வாழ்வு இருப்பதாகவும் , ஸ்தூல சரீரம் , சூக்ஷ்ம சரீரம் , காரண சரீரம், மகாகாரண சரிரம் என்றெல்லாம் அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடி யாத விவகாரங்களைக் கூறுவதும், நூலாசிரியரின் அறிவியல் பார்வைக் குறைவையும் சமூக சிந்தனையின்மை யையும் சுட்டுகிறது.

உடற்பயிற்சியும் யோகாசனமும் எதிர் எதிரானது அல்ல ; மாறாக ஒன் றோடொன்று நெருக்கமானது. பின்னிப் பிணைந்தது. ஆனால் நூலா சிரியர் இவற்றை எதிர் எதிராக நிறுத் துவது ஆபத்தான பார்வையாகும். மேலும் உடற்பயிற்சியால் அவசர புத்தியும் குறுக்குப் புத்தியும் ஒழுக்கக் கேடும் ஏற்படும் என்பதும், பிற்போக்கு சிந்தனைகளும் சுயநல எண்ணங் களும் பேராசைகளும் பெருகும் என்பதும் அடிப்படை ஆதாரமற்ற தாகும். அது போல் யோகாசனத்தால் முற்போக்கு சிந்தனைகளும் பொது நல எண்ணங்களும் ஒழுக்கமான வாழ்க்கையும் பெருகும் என்பதும் அதீத கற்பனையே ! வெறும் விளம் பரச் சொல்லாடலே.

சுரப்பிகள் குறித்தும் உளவியல் குறித்தும் சில அறிவியல் தகவல்கள் இந்நூலில் விரவப்பட்டிருந்தாலும் பொதுவில் ஃபேக்சயின்ஸாகவே இந்நூல் அமைந்துள்ளது.உப்பு, சர்க் கரை , முட்டை , அரிசி , பால் என ஐந் தையும் தவிர்க்கச் சொல்வது மருத்துவ அறிவியலுக்கு புறம்பானது. யாருக்கு எது தேவை எது தேவை இல்லை என் பதை அவரவர் உடல் நலன் சார்ந்து மருத்துவர் தாம் முடிவு செய்யவேண் டும் . பொதுவாகக் கூறுவது பிழையா கும் . மேலும் ஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் அதிகம் வாழும் நாட்டில் பாலையும், முட்டையையும் தவிர்க்கச் சொல்வது சமூக விரோதப் பார்வை யாகும்.

இப்படி பழுதான பார்வையைப் பேசும் முதல் 47 பக்கங்களைத் தொடர்ந்து யோகா செயல் விளக்கம் உள்ளது. அது குறித்து அத்துறை விற் பன்னர்கள் மட்டுமே கருத்துக் கூற இயலும். பாமரப்பார்வையில் பய னுள்ளதாகவே படுகிறது . ஆயினும் எல்லா யோகாசனத்தையும் எல்லோ ரும் செய்யக்கூடாது என்பதை வல்லு னர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடா தவை, கர்ப்பிணிப்பெண்கள் செய்யக் கூடாதவை என விதிவிலக்குகள் உண்டு. ஆனால் இந்நூலில் அந்தத் தெளிவு இல்லை.

யோகாசனக் கலை என்கிற பெய ரில் திசை திருப்பும் இந்துத்துவ முயற் சிகளுக்கு இந்நூல் துணை போகிறதோ என்கிற ஐயம் இந்நூலை வாசிக்கும் போது ஏற்படுகிறது . இது போல் யோகா குறித்து வெளிவந்துள்ள எண்ணற்ற நூல்களையும் அறிவியல் கண்கொண்டு பார்க்கத் தவறினால் நம்மையறியா மலேயே நாம் இந்துத் துவ மாயையில் வீழ்ந்து விட நேரிடலாம்.


யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை,

ஆசிரியர்கள் : கே . எஸ் . அழகிரி , திருமதி சிவகாமி,
வெளியீடு : நர்மதா பதிப்பகம்,

10, நானா தெரு , பாண்டி பஜார்,

தி.நகர் , சென்னை 600 017.

பக் : 164 , விலை : ரூ. 120.

   
   
    

1 comments :

  1. அகத்தீ

    நூலாசிரியர் பெயரை கே,எஸ்,இளமதி என திருத்தி வாசிக்கவும்.

Post a Comment