Posted by அகத்தீ

 எத்தனையோ

பழைய ஆல்பங்களை

குப்பைகூடையில்

வீசி இருக்கிறாய்..


ஞாபகக்குளத்தில்

அடிதொட்டு 

புதைந்து போனவை

அநேகம் !அநேகம் !


அஞ்சலி உரைகளில்

ஆத்மாவைத் தேடாதே

சடங்குகள் அவை

கடந்து போகும் காற்றாய்


உன் வாழ்க்கை கதையையும்

காற்றில்தானே

எழுதி வைத்திருக்கிறாய்

இழப்பதற்கு ஏதுமில்லை !


சுபொஅ.

26/10/2022.

0 comments :

Post a Comment