ஓகோ ! சிவனாரே ! சாம்பல் பீழை படிந்து

Posted by அகத்தீ Labels:

 


 ஓகோ ! சிவனாரே !

சாம்பல் பீழை படிந்து

தூர்ந்து போகட்டும்

உமது நெற்றிக் கண்!

 

எங்களுக்கு

மனுக்குலம் தழைக்க

மன்மதனும் வேண்டும்

எதேச்சதிகாரத்தின் முகத்தில்

காறியுமிழ

நக்கீரனும் வேண்டும்.”

 

கவிஞர் சிற்பியின் இந்தக் கவிதை வரிகள் எனக்கு எப்போதும் பிடிக்கும் . பல மேடைகளில் எடுத்துக் காட்டி இருக்கிறேன்.

 

“கவிதையே வாழ்வாக…” என்கிற கவிஞர் சிற்பியைக் கொண்டாடும் ஜே.மஞ்சுளாதேவியின் நூலைப் புரட்டிக்கொண்டிருந்த போது மீண்டும் கண்ணில் பட்டு நெஞ்சில் அலையடித்தது மேலே குறிப்பிட்ட கவிதை வரிகள்.

 

சுபொஅ. 23/12/23.



0 comments :

Post a Comment