பூட்டின் சாவி

Posted by அகத்தீ Labels:

 





பூட்டின் சாவி

 

 

பாழடைந்த பங்களாக்களும்

பாதியில் நின்றுபோன கட்டிடங்களும்

எழும்பிக் கொண்டிருக்கும் கட்டுமானங்களும்

கண்ணில் படாத

பயணம் ஏதேனும் உண்டா ?

 

சொத்துச் சண்டை  கவுரவ மோதல்

துரோகம் பாராமுகம் பொறாமை

குழைந்து பேசுதல் கூசாத பொய்

பரிமாறாத உறவுகளின் கூடல்

எங்கேனும் உண்டா ?

 

யார் நன்றாக இருக்கிறார்

யார் கவலை இன்றி காலம் தள்ளுகிறார்

யார் திருப்தியாய் வாழ்கிறார்

எது கஷ்டம் ? எது சந்தோஷம் ?

எல்லோரிடமும் ஒரே மாதிரி அகராதி உண்டா ?

 

எல்லாமே ஒப்பீடுதான்

எதனை எதனோடு யாரை யாரோடு

எப்படி ஏன் என்பதில்தான்

வாழ்வின் ரகசியம் புதைந்து கிடக்கிறது

பூட்டின் சாவி  அவரவர் அனுபவமே !

 

 

சுபொஅ.

17/12/2023.

 

 


0 comments :

Post a Comment