பொழுதைத் தின்று கொண்டிருக்கிறேன்

Posted by அகத்தீ Labels:

 



பொழுதைத் தின்று கொண்டிருக்கிறேன்

அது அவ்வளவு சுலபமாக இல்லை

 

பொக்கை வாயால் இறைச்சியை மெல்லுவதுபோல

அவ்வளவு மெதுவாக அணு அணுவாய்

 

புத்தகம் என் காதலிதான் இப்போதும்தான்

ஆயினும் முன்புபோல் அணைத்தே கிடக்க முடியவில்லை

 

எழுத்து என் நரம்போடு பின்னிப் பிணைந்ததுதான்

ஆயினும் நரம்புகள் முன்பு போல் முறுக்காய் இல்லை

 

நேற்றைய நினைவுகளில் மூழ்கிவிடாதிருக்க

புதிதாய் தேடுகிறேன் எளிதாக வசப்பட வில்லை

 

முதுமையில் உணவை தின்று செரிப்பது மட்டுமல்ல

பொழுதை தின்று செரிப்பதும் சவால்தான்.

 

[ சக வயது நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது தெறித்தவை. இது ஆண்களின் குரல் மட்டுமே .பெண்களின் குரல் ஓய்வைத் தேடுவதாகவே இருக்கும் ; ஓயாத வீட்டு வேலை அவர்களுக்கு]

 

சுபொஅ.

26/12/23.

 



0 comments :

Post a Comment