இருப்பதே பாக்கியம் !

Posted by அகத்தீ Labels:

 



இருப்பதே பாக்கியம் !

 

 

நீயாக எதையும் பாராதே !

மாமன்னர் சுட்டுவதை மட்டும் பார்!

 

நீயாக எதையும் பேசாதே !

மாமன்னர் சொல்வதை மட்டும் பேசு !

 

நீயாக எதற்கும் காது கொடுக்காதே !

மாமன்னர் சொல்வதை மட்டும் கேள் !

 

நீயாக எதையும் சிந்திக்காதே !

மாமன்னர் சிந்திக்கிறார் ! நீ மவுனமாயிரு !

 

ஆனால்,

 

நீ ! சுதந்திர மனிதன் உன் உரிமையை

மாமன்னர் நினைவூட்டுகிறார் !

 

நீயாக வேலை தேடு ! கடுமையாக உழை !

பலனை எதிர்பாராதே ! உழைப்பதே உன் கடன் !

 

உனக்காக மாமன்னர் சாப்பிடுகிறார் !

நாட்டுக்காக நீ உணவை தியாகம் செய் !

 

மாமன்னர் ராஜ்யத்தில் இருப்பதே பாக்கியம் !

வாழ்வதைப் பற்றி மனதாலும் நினையாதே!

 

சுபொஅ.

26/3/2023.


0 comments :

Post a Comment