Posted by அகத்தீ Labels:

 






ஆஞ்சநேயா ! ஆஞ்சநேயா !

உன் பக்தன் ஆகிவிடுகிறேன்

முதியவன் என்னைச் 

சுமந்து செல்வாயா ?

ஒரு சாலையில் சந்து பொந்தில்கூட

நடக்க முடியவில்லை

கொத்துப் பரோட்டோ போட்டு

குவித்து வைத்திருக்கிறார்கள் !

 

என் கவலையை

அனுமானிடம் சொன்னேன்

அவன் என்னிடம் சொன்னான்..

 

போடா போடா மூடா !

தேர்தல் வந்தால்தான்

எனக்கு மவுசு

’ அனுமன் சாலிசா’

கட்சிகளுக்கு நினைவுக்கு வரும்

கலவரம் செய்யணும்னா

பஜ்ரங்தள்ன்னு அவனுகளே

கிளம்பீருவானுக !

உன்னை சுமந்து பறந்தால்

என்னை உடைச்சு

ரோட்டில போட்டிருவானுக

எனக்குத் தேவையா ?

 

சர்க்காரும் கேட்கல

சாமியும் கேட்கல

மூத்த குடிமக்கள்

எங்கே போய் முட்டுறது ?

 

சுபொஅ.

14 /05 /26 .

0 comments :

Post a Comment