Posted by அகத்தீ Labels:

 


வழுக்கைத் தலையில் மயிர் முளைக்க

ஆயிரம் முறை தைலம் தடவிய பின்னும்

இன்னும் தடவிக்கொண்டே இருக்கிறான்

நம்பிக்கையா ? அறியாமையா ?

 

சிகப்பழகு கிரீம் தடவித் தடவி முகம்

சிகப்பானதாகச் சரித்திரம் இல்லை

அனாலும் கிரீம் விற்பனை குறையவே இல்லை

வியாபார வெற்றியா ? அறியாமையா ?

 

எத்தனைமுறை குரு பெயர்ச்சி வந்தாலும்

நம் வீட்டில் மட்டும் எப்போதும் சனிப்பெயர்ச்சிதான்

கடன் வாங்கி பரிகாரம் செய்து கடனில் மூழ்கினும்

ஜோதிடப் பொய்மையை உணர்வதே இல்லை

 

எண்ணையோ வெண்ணையோ உண்மையோ பொய்யோ

ரீல் சொல்வதையே  வாங்கு ! ரீல் சொல்வதையே நம்பு !

ரீலில் உழன்று ரீலில் மூழ்கி ரீலில் செத்தால் சொர்க்கம் நிச்சயம்

அல்காரிதமே அனைத்தையும் ஆக்கும் கொடுங்காலம் ....

 

சுபொஅ.

12 / 05 /26 .

 

 

 



0 comments :

Post a Comment