தோழமையான அறிவிப்பு
அன்பான தோழர்களே !
வணக்கம் .
நாளை தேர்தல் முடிவுகள்
வந்துவிடும் . திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் .எனக்கு ஐயமில்லை.
மாநில அரசு புதிய சூழலை ,
புதிய சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் .
ஒவ்வொரு கட்சியும் மக்கள்
நலன் சார்ந்து போராட்டங்களையும் பரப்புரைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .
பாசிச அபாயம்
தொடர்வதையும் ; மாநில உரிமைகள் ஆபத்தானக் கட்டத்தை நெருங்குவதையும் ; ஜனநாயக சமூகப் பொருளாதாரப்
பண்பாட்டு நெருக்கடிகள் முற்றுவதையும் ;
முழுமையாக உள்வாங்கி ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட வேண்டும் .
நான் தமிழ்நாட்டில்
இப்போது குடியிருக்கவில்லை . நேரடி அரசியல் பங்கேற்பும் இல்லை . சமூக வலைதளங்களில்
முடிந்தவரை இயங்கி வந்தேன் . இனி இதில் என் பணியை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம்
என யோசிக்கிறேன் .
ஏனெனில் என் நெடுநாள்
கனவான ஒரு எழுத்துப் பணிக்கு திட்டமிட்டு
வருகிறேன் .அதற்கு நிறைய வாசிக்க வேண்டி உள்ளது . தயாரிக்க வேண்டி உள்ளது . நேரம்
ஒதுக்க வேண்டி உள்ளது . எனவே சமூக வலைதளங்களில் உலவும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள
விழைகிறேன் .
தேவைப்படும்போது சந்திப்பேன்
.
நன்றி !
சு.பொ.அகத்தியலிங்கம் .
03 /05 /26 .
0 comments :
Post a Comment