காந்தியும் பிள்ளையாரும்

Posted by அகத்தீ Labels:

 





காந்தியும் 


பிள்ளையாரும்

 





பிள்ளையார் : காந்திஜி ! என் சுற்று முடிந்தது


.இன்று உன் சுற்று ஆரம்பம்..காவிகளிடம் ஜாக்கிரத….

 

காந்தி : பிள்ளையாரப்பா ! நீ என்ன சொல்ல வருகிறாய் ?

 

பிள்ளையார் : காந்திஜி ! முதலில் என்னைக் கும்பிடுவானுக ! என் தலையில கலகக் கொடி ஏற்றுவானுக …  அப்புறம் ஆற்றில குளத்தில கடல்ல போட்டு சாகடிப்பாங்க… இப்போ உன்னைக் கும்பிடுறானுக …

 

காந்திஜி : பிள்ளையாரப்பா நீ அதிர்ஷ்டசாலி ! உன்னைக் கும்பிட்டுட்டு கொல்றாங்க … என்னை முதல்ல கொண்ணுட்டானுக அப்புறம்தான் கும்பிடுறாங்க ..

 

பிள்ளையார் : காந்திஜி ! ஆமாம் ஆமாம் அத மறந்திட்டேன் …இவனுக நம்மைத் தூக்கிச் சுமக்கிறதே நம்மப் போட்டு மிதிக்கத்தான்…

 

காந்திஜி : பிள்ளையாரப்பா  ! இவனுக பதவிப் பசிக்கும் … இரத்தப்பசிக்கும் … வெறுப்பு அரசியலுக்கும் … நாமதானா பலி ஆடு ?

 

பிள்ளையார் : காந்திஜி ! நானு பாலு குடிக்கிறதா ஊரெல்லாம் டிராமா போட்டானுக … நான் ஒரு சொட்டு குடிச்சிருந்தா அப்பவே என் கோயில் புகுந்து வெட்டியிருப்பானுக  என் ஜோலி முடிஞ்சிருக்கும்… நான் கல்லு களிமண்ணுன்னு அவனுகளுக்கு நல்லாத் தெரியும் அதனாலதான் என்ன வச்சி கலவரம் செய்ய சதி செய்யுறாங்க…

 

காந்தி : அவனுக தெய்வ பக்தியும் வேஷம் , அவனுக தேசபக்தியும் வேஷம் , சாதி வெறியனுக மற்றும் கார்ப்பரேட் அடியாளுங்க.. மனசு முழுக்க குரோதம் ,வன்மம் இவனுக நெஞ்சில அன்பு , கருணை ,மனிதம் மருந்துக்கும் கிடையாது . நான் சொன்ன ராமராஜ்யம் ‘அன்பு ராஜ்யம்’ . அங்கு ராமனும் ரஹிமும் ராபர்ட்டும் தோள்ல கைபோட்டு நடப்பாங்க .. இவங்க சொல்ற ராமராஜ்யம் எல்லோரும் வெட்டிட்டு சாகிற  ‘குரோத ராஜ்யம்’…

 

பிள்ளையார் : காந்திஜி ! மெதுவா பேசு ! இது  ‘புல்டோசர் ராஜ்யம்’ .. உம்மை பீடத்தோடு பிடுங்கி எறிய புல்டோசரை அனுப்பிடுவானுக…

 

பிள்ளையார் எலி வளையைத் தேடினார் பதுங்க … !!!

 

நவகாளியைப் போல்  கைத்தடியோடு 

“ஒண் மேன் ஆர்மி” ஆனார் காந்தி …… !!!

 

சுபொஅ.

2/10/2023.

 

 


0 comments :

Post a Comment