எல்லா மதக் கடவுள்களும் தான்.

Posted by அகத்தீ Labels:

 


இன்றைய உலகில் மிகமிக அதிக பயத்துடன் ஓடி ஒளிந்து கொண்டிருப்பது யார் ?

 

சந்தேகம் என்ன ? கடவுள். கடவுளேதான்.

 

எந்த மதக் கடவுள் ?

 

வேறுபாடெல்லாம் இல்லை . எல்லா மதக் கடவுள்களும் தான்.

 

ஏன் ?

 

ஒன்றா ? இரண்டா ? சொல்லி அழ…

 

சொன்னால்தானே தெரியும்

 

சாத்தான்கள் கையில் அதிகாரம் . கடவுளின் குழ்ந்தைகள் கொல்லப் படுகிறார்கள் .பட்டினி போடப்படுகிறார்கள்.பழிவாங்கப் படுகிறார்கள். எல்லாம் கடவுளின் பெயரால் . அநீதியைத் தடுக்க இயலாத கடவுள்கள் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறார்கள்.

 

மெய்தான் .மெய்தான் . உண்மையை உரக்கச் சொல்லாதே நீயும் ஓடு அந்தக் கடவுள்களின் பின்னால் …

 

சுபொஅ.

22/10/23.


0 comments :

Post a Comment