கொஞ்சம் சுயதப்பட்டம் … என் நூல்கள் 27 டிசம்பர் 2021.

Posted by அகத்தீ Labels:

 

கொஞ்சம் சுயதப்பட்டம் … என் நூல்கள் 27 டிசம்பர் 2021.

 

[27/12/2021 அன்று எழுதிய ஐந்தொகைக் கணக்கு ]

 

சென்னைப் புத்தகத் திருவிழா நெருங்க நெருங்க , தன் புத்தகம் பற்றி பேசாவிட்டால் எழுத்தாளர் இல்லை என ஒதுக்கிவிடுவார்களே………….  என்ன செய்ய ?

 

 

 “மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினுந்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுந்
தன்னை மறுதலை பழித்த காலையுந்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே.  [ நன்னூல்.55]”

 

இன்றைய சூழலோடு இதற்கு உரைசெய்வதாயின் ,

 

 

 “ அரசுக்கு எழுதும் விண்ணப்பத்திலும் – தன்னைப் பற்றி சரியாக உணராதவர்கள் புரிந்து கொள்ளாதவர் மத்தியிலும் – போட்டி களத்தில் தன்னை நிறுத்தவும் – தன்னை பிறர் இழித்தோ பழித்தோ உண்மையை மறுத்தோ பேசும் பொழுதும் ; ஒருவர் தன் தகுதியை நிலைநாட்டவோ , தெரியாதோருக்கு தெரிவிக்கவோ தன் பெருமையை சொல்லலாம்” என்கிறது நன்னூல் .

 

 

எம் இயக்கப் பணியையோ பொதுப் பணியையோ பட்டியிலிடப் போவதில்லை . அதனைப் பற்றி பேச இப்போது அவசரமும் இல்லை ..அவற்றை இரங்கற் குறிப்பு எழுதுவோருக்கு விட்டுவிடுகிறேன் . என் எழுத்துப் பணியைச் சார்ந்தே இப்போது பேசுகிறேன்.

 

 

நான் எழுதியவை குறித்து நானே பட்டியல் போடுவது தற்புகழ்ச்சி ஆகிவிடுமே என இதுவரை தவிர்த்து வந்தேன் . நண்பர் சிலரின் வேண்டுகோளுக்கும் வற்புறுத்தலுக்கும் இணங்கவும் ,சிலரின் கேள்விகள் என்னை உசுப்பிவிட்டதாலும் இங்கே தொகுத்துவிட்டேன் என் நினைவுக்கு எட்டியவரை .

 

 

நான் என் பெருமையை பீற்றவில்லை . நான் எழுதியவற்றைத் தொகுத்துள்ளேன் கீழே பட்டியலும் விபரமுமாய் தகவலுக்காக அவ்வளவுதான்…..

 

 

நான் சார்ந்த இயக்கத்தின் கருத்துகளத்தில் நின்று பரப்புரை செய்யும் எழுத்தாளனே . நடுநிலையாளன் அல்ல ;ஓர் சார்பானவனே ! என் எழுத்து எப்போதும் கடைசி பெஞ்ச் மாணவனை நோக்கித்தான் . அதுதான் என் இலக்கும் பயணமும் …

 

 

 

 

1) சிந்திக்கும் வேளையில் குறள் [1994]

 2) விடுதலைத் தழும்புகள் (தமிழக அரசு முதல் பரிசு) [1998]

3) மனித உரிமைகள் வரலாறும் அரசியலும்திருப்பூர் தமிழ்சங்க விருது)[1998]
(
மேற்கண்ட இரு நூல்களும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகிறது)

4) என் கேள்விக்கு என்ன பதில்?( குழந்தைகள் அறிவியல் நூல்)(பல ஆயிரம் பிரதிகள்  விற்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தால் அச்சிடப்பட்டது)

 

5) சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்[2004]

 
6) 
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் [2002] 

மீண்டும் 2020 ல் விரிவாக்கப்பட்ட பதிப்பு

7) காதலும் வாழ்வும்-பழந்தமிழ் இலக்கியத்தில்[2002]

 

8] சு.சமுத்திரம் படைப்புலகம்[2002]

 
9) 
சிங்காரவேலரைப் பயில்வோம் [2008]

 

10] கீதை தரும் மயக்கம் [2008]


11)பொதுவுடைமை வளர்த்த தமிழ் [ஜூன் 2010 ]

 

12] ஆர்.உமாநாத் வாழ்க்கை வரலாறு ; பார்வை புதிது பயணம் நெடிது [ செப்டம்பர் 2000 ]

 

13] பூக்களோடும் போர்முரசுகளோடும் . DYFI வரலாறு .

 
14] 
கோடிக்கால் பூதமடா ; ஜீவாவின் கவிதைப் பயணம்[2011]

 

கீழ்கண்ட நூல்கள் 2013 ல் கட்சிப் பொறுப்புகளைத் துறந்தபின் எழுதியது

 

15]குடும்பத்தில் கூட்டாட்சி[2013]

16] நாத்திகம் vs ஆத்திகம் அர்த்தமுள்ள உரையாடல்[2015]  

17] சே குவேரா : கனல் மணக்கும் வாழ்க்கை [2015]

18]100 கேள்வி-பதில் : ஆன்மீகமா ? அறிவியலா ? [2016]

19] சும்மா கிடந்த சொல்ல எடுத்து : என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை [2017]

20]புரட்சிப் பெருநதி [2018]

 

21]மார்க்சியம் என்றால் என்ன ? : ஓர் தொடக்க நிலைக் கையேடு[2018]

 

22] கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம் : ஓர் எளிய முன்னோட்டம்.[2021]

 

 

ü  பாசிசம் பழசும் புதுசும் [அஜய் அஹமதுவின் சிறு நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.]



மேலும் பல சிறு நூல்கள் – இதுவரை எழுதியவை


v  வேலை இன்மை ஒழிய எரிமலையாய் எழுக ![1978] SYF வெளியீடு

v  மனிதனாக வேண்டும் மனதில் வையடா !DYFI வெளியீடு

v  வேலை இனியும் கனவல்ல  [1990] CCAU வெளியீடு

v  வீட்டைக் கொழுத்தி வெளிச்சம் பெறுவரோ – மின் ஊழியர் மத்திய அமைப்பு வெளியீடு

v  மூடநம்பிக்கை என்றால் என்ன ? பாரதி புத்தகாலய வெளியீடு

 

v  அறிவியல் பார்வை என்றால் என்ன ?[2021]

 

v  தகவல் அறியும் உரிமைச் சட்டம் 

v  தோழர் பி.ராமமூர்த்தி 

v  காதெலென்னும் உயிர்விசை [2015] DYFI வெளியீடு

v  கருத்து சுதந்திரம் - வெறும் சட்டச் சொல் அல்ல [2015]

 

v  மத்திய அரசிடம் எதிர்பார்ப்புகள்

 

v  விடிவுகாண விழித்தெழு

 

உட்பட டஜனுக்கும் மேற்பட்ட 
சிறு நூல்கள்
 
 

 

 

·         விடுதலை வேள்வியில் தமிழகம்[2000] , 

 

·         விடுதலைப் போராட்டம் கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் [2014]ஆங்கிலத் தொகுப்பில் .மொழியாக்கமும் வந்துள்ளது

·         சிங்காரவேலர்  போன்ற பல தொகுப்பு நூல்களில் தகுந்த பங்களிப்பு .

 

 

தீக்கதிர் ,செம்மலர் , இளைஞர் முழக்கம் , மகளிர் சிந்தனை , சிஐடியு செய்திகள் ,போக்குவரத்துத் தொழிலாளி ,புதிய புத்தகம் பேசுது, விழிப்பு ,சிவந்த சிந்தனை , நோக்கு , நந்தன் ,சிகரம் ,பீப்பிள்ஸ் டெமாக்கரசி ,மார்க்சிஸ்ட் , வலைப்பூ மற்றும் வலைதளங்கள்  உட்பட பல ஏடுகளில் எழுதியுள்ள கட்டுரைகள் ,கவிதைகள் ,படைப்புகள் .

 

 

நான் எழுதிய கவிதைகள் , சொற்கோலம் முதலியன  இன்னும் தொகுப்படவும் இல்லை . நூலாக்கம் பெறவே இல்லை. நான் எழுதியவற்றில் நூல் வடிவம் பெறாதவை நிறைய உண்டு .சேமித்து வைக்கவே இல்லை .

 

[ akatheee.blogspot.com ல் பிரசுரிக்கப்படாத என் எழுத்துகள் பல இருக்கும்.]

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

27/12/2021.

 



 

0 comments :

Post a Comment