#மெளனத்தைக் குலைத்த #மெல்லிய புன்னகை எங்ஙனம் ?

Posted by அகத்தீ Labels:



#மெளனத்தைக் குலைத்த
#மெல்லிய புன்னகை எங்ஙனம் ?        

இவ்வளவு களைகள்
மண்டிக் கிடக்கும் வயலில்
எப்படி அங்கொன்று இங்கொன்றாய்
நெற்கதிர்கள் ?

நீர் நிலைகள் வறண்டு
வெடித்துக் கிடக்கும் பூமியில்
ஓரிரு இடத்தில் விரலில் ஒட்டும்
நீர் திவலைகள் எப்படி ?

இருள் போர்த்திய இரவு
எதிரில் இருப்பதே தெரியவில்லை
இருளைக் கிழிக்கும்
மின்மினிகள் அங்கெப்படி ?

அப்படி  ஒரு அமைதி
மூச்சுவிடவும் தயக்கம்
மெளனத்தைக் குலைத்த
மெல்லிய புன்னகை எங்ஙனம் ?                   

அனைத்தையும் இழந்து
நிராயுதபாணியாய்
வல்லூறுகளில் நடுவே – ஆயினும்
நம்பிக்கை துளிர்க்கிறது !!!

சு.பொ.அகத்தியலிங்கம்.
12 ஜுன் 2019 .இரவு . 7.55.




0 comments :

Post a Comment