சொல்லடா ! ஜி 21 !

Posted by அகத்தீ Labels:

 


சொல்லடா ! ஜி 21 !

 

புவி சூடாகிறது

காலநிலை தடுமாறுகிறது

வானம் பொய்த்துப் போகிறது

வாய்ப்பறை விண்ணைக் கிழிக்கிறது !

 

கவிதையில் கதையில் கலையில்

இயற்கையை நேசிப்பதாய் கதைக்கிறாய்

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செயலிலும்

இயற்கையை யோசிக்காமலே வதைக்கிறாய் !

 

ஒவ்வொரு தனிமனிதரும்

இயற்கையை சிதைக்கும் குற்றவாளியே !

ஆடம்பரமும் சுரண்டலும் லாபவெறியும்

சுயநலமும் ஏகபோகமும் பெரும் வைரிகளே !

 

எல்லாவற்றையும் சரிசெய்ய கூடினார்கள்

விடிய விடிய பேசினார்கள் விருந்துண்டார்கள்

ஒருப்படியாய் ஓர் செயல்திட்டமும் இல்லாமலே

வழக்கமான வாய்ப்பறையோடு வசுதைவ குடும்பம்

மந்திரத்தையும் நீட்டி முழக்கி  பேசி ஓய்ந்தனர் !

மந்திரத்தால் மாங்கனி விளையுமோ ! சொல்லடா ! ஜி 21 !

 

சுபொஅ.

14/9/2023.

 

0 comments :

Post a Comment