விதி ஒன்றுதான்….

Posted by அகத்தீ Labels:

 

விதி ஒன்றுதான்….

 

தறிகெட்டு ஓடும்

எதுவும் குப்புறச் சாயும் !

வாகனமோ சர்க்காரோ

விதி ஒன்றுதான்.

 

நுனிக் கொம்பர் ஏறின்

கிளை ஒடியும் அவர் வீழ்வர்

யாராக இருப்பினும்

விதி ஒன்றுதான்

 

மதுபோதையோ மதபோதையோ

எல்லை மீறின் மனிதம் சாயும்

எங்கே ஆயினும்

விதி ஒன்றுதான்

 

அதிகார மமதையும் மதவெறியும்

கைகோர்க்கும் போதில்

நாடு கொடும் நரகமாகும்

எங்கும் விதி ஒன்றுதான்.

 

குட்ட குட்ட குனிந்தவன்

தரை முட்டியதும் நிமிர்வான்

குட்டியவன் தாடை பெயரும்

எந்த நொடியும் நிகழலாம் !!

 

 

சுபொஅ.

19/6/2022.

 

 

 


0 comments :

Post a Comment