ரகசியம்

Posted by அகத்தீ Labels:

 

ரகசியம்



மனம் விசித்திரமானது

புழங்கிய இடத்தை

புழங்கிய மனிதர்களை

புழங்கிய பணியை

புழங்கிய வழிதடத்தை

மறந்துவிடுவதில்லை

என்பது மட்டுமல்ல

அசைபோட்டுக் கொண்டே இருக்கும்

முதுமையின் துயரமே அதுதான்.


ஆயின் காலகதியில் அனைத்தும் 

மாறியும் மறந்தும் போகும்

எல்லாவற்றையும் 

நினைவில் வைத்துக்கொள்ள

வரலாற்றுக்கு என்ன கட்டாயம் ?

கிரீடம் தரித்தவர்களையே

குப்பையில் வீசும் வரலாறு

செங்கல் சுமந்தவனையும்

செந்நீர் சிந்தியவனையுமா  

நினைவில் வைக்கப் போகிறது ?


தூரத்தில் இருந்து ரசிக்கவும்

துயரத்தை மனதில் புதைக்கவும்

கேட்டால் மட்டுமே சொல்லவும்

அளவறிந்து நிறுத்தவும்

அழைத்தால் மட்டுமே போகவும்

அன்போடு அழைப்பை நிராகரிக்கவும்

நம் கடன் முடிந்ததென விலகவும்

நேற்றின் நினைவிலும்

நீங்கா மனநிறைவிலும்

வாழப்பழகின் முதுமை இனிக்கும் !


சுபொஅ.

25/6/2022.

0 comments :

Post a Comment