SOL93

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .93 [ 12 /12/2018 ] சிலர் எப்போதும் தன் பெருமைகளைப் பேசிக் கொண்டே இருப்பர் ; மற்றவரும் அவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர் .கொஞ்சம் பேச வாய்ப்பு கிடைத்தால் போதும் தான் செய்த சிறு காரியத்தையும் மலையளவு உயர்த்தி நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவர் . தற்பெருமை பீற்றும் இவரைக் கண்டால் பலருக்குப் பிடிக்காது .முகத்துக்கு நேராக சொல்ல முடியாவிடினும் முதுக்குப்பின் கெக்கொலி கொட்டிச் சிரிப்பர் . இன்னொரு சாரார் தான் செய்ததைக் கூட சொல்லமாட்டார்கள் ;யாராவது சொன்னாலும் சொல்லவிடாமல் தடுப்பார்கள் . நெளிவார்கள். அவரின் அருமை பெருமை அறியாமல் யாரேனும் இகழும் போதும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அமைதி காப்பர் . நிறைகுடம் தழும்பாது என இத்தகையோரைப் பற்றி சொல்லி ஓய்ந்துவிடுவோம். இரண்டுமே இரண்டு கோடி . தற்பெருமை கூடாது .ஆனால் தன் தகுதி உணர்த்தல் பிழை அல்ல .நிறைகுடம் மட்டுமா காலிக்குடம்கூட தழும்பாது .நீங்கள் நிறைகுடமா , காலிக்குடமா என்பதை புரிய வைத்தல் அவசியம் அல்லவா ? இப்போதெல்லாம் சுய அறிமுகம் [self introduction ] என்பது ஒரு நடைமுறையாகி வருகிறது .தன்னை அறியாதோர் மத்தியில் தன்னை அறிமுகம் செய்து உரிய இடத்தைப் பெறுவது தனிக்கலை . நான் யார் தெரியுமா , என் அறிவென்ன , ஆற்றல் என்ன . இப்படிப் புலம்புவது பேதமை ஆனால் எனக்கு இதைப் பற்றி கொஞ்சம் தெரியும் ,இதில் கொஞ்சம் அனுபம் உண்டு . சொல்லுகிறேன் பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் என பணிவாகத் துவங்கி விவரங்களை தெளிவாக எளிமையாக முன்வைத்தால் உங்களை சரியா உணர்ந்து ஏற்பர் . அங்கேயும் குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர் ஒருவர் இருக்கக்கூடும் .அவரை மென்மையாக அல்ல கறாராகத்தான் கையாள வேண்டும் . தற்பெருமை கூடவே கூடாது .ஆயின் தன் தகுதியை உணர்த்துவது தவறல்ல .தேவை .அதனை கையாளும் லாவகமே உங்களைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கும் .சுயத்தை இழக்காதீர் .சுயதப்பட்டம் வேண்டாம்.அவ்வளவுதான். Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment