தினம் ஒரு சொல் . ஓர் வேண்டுகோள்..

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் . ஓர் வேண்டுகோள்.. சமூக வலைதளத்தை வெறுமே கேலி,கிண்டல் ,அரசியல் திண்ணைப் பேச்சு இவை தாண்டி பயனுள்ள விதத்தில் பயன்படுத்த இயலுமா என்பது என் கேள்வி . சில சிறிய முயற்சிகளை இதில் சோதித்தும் வருகிறேன் . அதன் ஒரு பகுதியாக “தினம் ஒரு சொல்” என 22/8/2018 ல் ஆரம்பித்தேன் .நேற்றோடு [23/12/2018] 124 நாட்கள் கடந்துவிட்டன . இடையில் பல்வேறு பணி நிமித்தம் சில நாட்கள் விடுபட்டன .ஆக எப்படியோ 100 நாட்கள் ஒரு தொடர் முயற்சியை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டேன் . நான் எதிர்பார்த்ததைவிட அதிகம் வரவேற்பு கிடைத்தது .மகிழ்ச்சி . http://akatheee.blogspot.com/2018/12/100.html எனும் வலைப்பூவில் அனைத்தும் மொத்தமாகக் காணக்கிடைக்கிறது .வாய்ப்புள்ள நண்பர்கள் படித்துவிட்டு உங்கள் கருத்தை முகநூலில் இதன் பதிலாகவோ ,உள்டப்பியிலோ ,அல்லது agathee2007@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ பதிவு செய்யுங்கள் . அது அடுத்தகட்ட நகர்வுக்கு உறுதுணையாகும் . இப்பதிவின் இடையில் ஒரிரு நண்பர்கள், “ நீ யோக்கியமா ? உனக்கு என்ன தகுதி இருக்கு ? சொன்னபடி நீ நடந்ததுண்டா ?” என்பன போன்ற விமர்சனங்களை வீசினர் .அவர்களுக்கு சொல்லுவேன் .இங்கே நான் சொன்னவை நான் செய்தது மட்டுமல்ல செய்யத்தவறியதுதான் .அனுபவம் என்பது இரண்டும் கலந்ததே . சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும் .சொன்னபடி நடப்பவர் மிகவும் சொற்பம் . நானும் நீங்களும் என்னை விமர்சித்தவரும் அப்படியே .ஆயினும் தொடர்ந்து சொல்வதும் ,செய்ய முயற்சிப்பதுமே முன்னேற்ற விதியாகும் . மொத்தமாய் மீண்டும் படியுங்கள் . உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் . புத்தாண்டில் இன்னொரு புது முயற்சியோடு சந்திப்பேன் . தோழன் சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment