கடவுள்

Posted by அகத்தீ Labels:

“நாத்திகச் சட்டையை எல்லாம் ஆத்திகச் சட்டையாய் ஆக்குவோம்.” இப்படி அக்கா தமிழிசை சொன்னதைக் கேட்டுவிட்டு அப்படியே தூங்கப் போனேன் . கனவில் கடவுள் வந்தார் .எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்தது . “ நான் தான் கடவுள் வந்திருக்கேன்…” “ எங்கே உன் ஆதர் அட்டையைக் காட்டு…” “ நான் கடவுளப்பா… எனக்கெல்லாம் ஆதர் கிடையாது ….” “ அதெல்லாம் ஒத்துக்க முடியாது … மாட்டுக்கே ஆதர் இருக்கும் போது கடவுளுக்கு இருக்காதா ? நீ ஒரிஜினலா ? டுப்பிளிகேட்டா ? எப்படி சோதிக்கிறது … ஆதர் கார்டு கொடு !” “ ஐயோ எனக்கு வந்த சோதனை … எங்கே போய் முட்டுவேன் … ஆதருக்கு எங்கே போவேன்..?” “ சரி ! விட்டுத் தொலை … நீ என்ன சாதி அதையாவது சொல்லு…” “ அட ! கடவுளுக்கு சாதி ,மதம் எல்லாம் கிடையாதப்பா,,..” “ அஸ்கு புஸ்கு இந்தக் கதை எல்லாம் வேணாம் .. அனுமார் என்ன சாதின்னு உபி முதல்வர் சொல்லிட்டாரு …. நீ எந்த சாதி சொல்லு …!!” “ ஆள விடுடா ! நாத்திகனே தேவலாம் இல்லேன்னு சொல்லிட்டு போயிடுறான் … இருக்குன்னு சொல்லிட்டு இப்படி பஞ்சர் பண்றது இந்த ஆத்திக பரதேசிகதான் …[கடவுள் கோபத்தில் கத்தினார் ] “யோவ் ! என்னய்யா எதைக் கேட்டாலும் இடக்கு மடக்கா சொல்ற நீ நெஜமாலுமே கடவுள்தானா சந்தேகமாக இருக்கு .. சரி போகட்டும் உன் பெர்த் சர்ட்டிபிகெட் , பெர்த் பிளேஸ் எல்லாம் கரெக்டா சொல்லு பார்ப்போம்..!!” “எனக்கு ஜென்ம பூமியும் கிடையாது ஜென்மதினமும் கிடையாது நம்புங்கடா….” “ அஸ்கு புஸ்கு போங்கு காட்டாத … நீ ஆண்டி இந்துவா ? ஆண்டி இண்டியனா ? உங்க அம்மாவுக்கு இடுப்புவலி எடுத்து பொறந்த இடம் எங்க சங்கிகளுக்கே தெரியும் போது உனக்குத் தெரியாதா ?” “ டேய் ! நம்புடா !அதெல்லாம் சும்மா அரசியல் வெளயாட்டுடா ! நானே கற்பனை எனக்கு அம்மா அப்பா பிறந்த இடம் பிறந்த நேரம் எல்லாம் மகாரீலுடா … ஆளவிடு …” “ ஏய் ! நீ ஆண்டி இண்டு … தேஷ் துரோகி…” என நான் கத்த கடவுள் ஓட்ட மெடுத்தார் . [ ஏன் இப்படி தூக்கத்தில கனவு கண்டு என் தூக்கத்தையும் கெடுக்குறீங்களோ என மனைவி என்னை உசுப்ப மலங்க மலங்க விழித்தேன்.]

0 comments :

Post a Comment