அமிர்த காலம் .

Posted by அகத்தீ Labels:

 


அமிர்த காலம் .

 

பாற்கடலை

அசுரர்கள்

வியர்வை

சொட்டச்சொட்டக்

கடைந்தனர் .

 

தேவர்கள்

காவிக்கொடி நிழலில்

  ‘அச்சாதீன்’ பாடி

கண்டு களித்திருந்தனர்.

 

நிர்மலமாய் சிவனார்

நொடிக்கொரு

உடை அணிந்து

தலைமையேற்று

வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

 

திரண்ட அமிர்தத்தை

திரட்டி எடுத்து

தேவர்கள்

வாயில் ஊட்டிவிட்டார்

சிவனார் .

 

கக்கிய நஞ்சை

வழித்துண்ணுமாறு

அசுரர்களுக்கு

அருளாசி வழங்கினார்

சிவனார்.

 

அமிர்த காலமென

சிவனாரும் தேவர்களும்

குதூகலிக்க

கலிகாலமென

அசுரர்கள்

கண்ணீர்விட்டனர் .

 

சுபொஅ.

2/2/2023.


0 comments :

Post a Comment