குறுமதியாளருக்கு….

Posted by அகத்தீ Labels:

 

குறுமதியாளருக்கு….




 

பட்டாம் பூச்சிகளின்

வண்ணங்களை பட்டியல் போட

சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 

மலர்களின்

வாசனையை வகைப் படுத்த

வழிதெரியாது தவிக்கிறேன்

 

கனிகளின்

சுவையை விவரிக்க இனிப்பு என்கிற

ஒற்றைச் சொல் போதுமானதாக இல்லை .

 

கானகத்தின் கனத்த மவுனத்தை

கவின் சிரிப்பை தாள இசையை

நகலெடுக்க கருவி இல்லை !

 

அருவியின் பேரழகை

தாள லயத்தை நீர்ச் சுழிப்பை

சொல்லில் அடக்க முடிவதில்லை

 

ஒற்றையாய் அனைத்தையும் குறுக்கும்

குறுமதியாளருக்கு பன்மையின் வலிமை

எப்போதும் புரியப் போவதில்லை !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

23/1/2022.

0 comments :

Post a Comment