sorkolam 9

Posted by அகத்தீ Labels:




சொற்கோலம் . 9.

என் பார்வையும் உன் பார்வையும் ஒரே கோணத்தில்  இல்லை . என் பார்வையில் நான் சொன்னதுதான் சரி.நான் செய்ததுதான் மிகச்சரி .உன் பார்வையில் நீ சொன்னதும் செய்ததும் சரியாக இருக்கக்கூடும் ;ஆயினும் நானே சரி !

மாமியார் கோணம் .மருமகள் கோணம் .கணவன் கோணம் .மனைவி கோணம் . அப்பா கோணம் .பிள்ளை கோணம் .அண்ணன் கோணம் . தம்பி கோணம் . அக்கா கோணம் .மருமகன் கோணம் . .மாமா கோணம் .மச்சான் கோணம் .மச்சினி கோணம் .ஒவ்வொன்றும் ஒரு ரகம் .

எதுவும் முழுதாய் சரியுமல்ல ; முழுசாய் தவறுமல்ல . அவரவர் தன்நலம் தன் பக்க நியாயத்தை மட்டுமே பார்க்கச் செய்யும் . ஆயின் நியாயத்தின் தராசு முள் அவர்களுக்கு எதிராய் போகக்கூடும் .

அதிலும் குடும்பம் ,உறவு ,நட்புக்குள் மோதல் வரும் போது நியாயம் சொல்லப் புகின் ஒரு பக்க பகையே மிஞ்சும் . இன்னொரு பக்கமும் நாம் முழுசாய் அவர் சொன்னதை புரியவில்லை அல்லது ஏற்கவில்லை என வருத்தம் மேலிட ஒதுங்குவர் .

அது நமக்கு சம்மந்தம் இல்லா விஷயம் என ஒதுங்கினும் ; நாம் எதிர் பக்கம் சேர்ந்து இவரை ஒதுக்குவதாய் இருவரும் குற்றம் சாட்டுவர் .

உங்கள் சொந்தக் கோணத்தைத் தவிர்த்து இந்தக் கோணத்திலும் அந்தக் கோணத்திலும் மாறி மாறி உள்ளுக்குள் ஓர் விசாரணையை அரங்கேற்றினால் ஓரளவு நியாயம் பிடிபடும் .

ஆனால் ஒன்று  சுத்த சுயம்பான சார்பற்ற நியாயம் என்பது வெறும் பேச்சே !


0 comments :

Post a Comment