சிந்திக்க வைக்க .. நம்பிக்கை அளிக்க ..

Posted by அகத்தீ Labels:


“சட்டமன்ற , நாடாளு மன்றத்திற்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக் கும் வேட்பாளர்களுக்கு முதலாளிகள்தான் செலவழிக்கிறார்கள். நடைமுறையில் இந்த முதலாளிகள் வாக்காளர்களை இது போன்ற மக்கள் மன்றங்களிலிருந்து பிரித்து விடுகிறார்கள். இதன் விளைவாக மக்கள் பிரதிநிதிகள் எளியமக்கள் நலன்களைப் பாதுகாப்பதில்லை. மேலும் இன்றைய சூழலில் பத்திரிகை , வானொலி , கல்வி தற்போது தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்களையும் சேர்க்கலாம் தகவல் தொடர்பின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் முதலாளிகள்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தம் கையில் வைத்திருக்கிறார்கள் .எனவே தனிப்பட்ட ஒரு குடிமகனால் சரியான முடிவுகள் எடுக்கவோ , தனது அரசியல் உரிமை களை சரியானபடி பயன்படுத்தவோ முடி வதில்லை .”
...........................................................................................................................................................
...........................................................................................................................................................


சிந்திக்க வைக்க .. நம்பிக்கை அளிக்க ..

சு.பொ. அகத்தியலிங்கம்

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு ,உலகப் புகழ்பெற்ற ‘ மன்த்லி ரெவ்யூ ’ கட்டுரைகள், தொகுத்தவர்கள் : பாபி எஸ் ஒர்டிக்ஸ் , திலக் டி .குப்தா, தமிழில் : ச . சுப்பாராவ்வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 , இளங்கோ தெரு , அண்ணாசாலை ,சென்னை - 600 018.பக் : 240 , விலை : ரூ . 150.

“சட்டமன்ற , நாடாளு மன்றத்திற்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக் கும் வேட்பாளர்களுக்கு முதலாளிகள்தான் செலவழிக்கிறார்கள். நடைமுறையில் இந்த முதலாளிகள் வாக்காளர்களை இது போன்ற மக்கள் மன்றங்களிலிருந்து பிரித்து விடுகிறார்கள். இதன் விளைவாக மக்கள் பிரதிநிதிகள் எளியமக்கள் நலன்களைப் பாதுகாப்பதில்லை. மேலும் இன்றைய சூழலில் பத்திரிகை , வானொலி , கல்வி தற்போது தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்களையும் சேர்க்கலாம் தகவல் தொடர்பின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் முதலாளிகள்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தம் கையில் வைத்திருக்கிறார்கள் .எனவே தனிப்பட்ட ஒரு குடிமகனால் சரியான முடிவுகள் எடுக்கவோ , தனது அரசியல் உரிமை களை சரியானபடி பயன்படுத்தவோ முடி வதில்லை .”

மேலே சொன்னவை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு குறித்து எழுதப்பட்ட விமர்சனம் போல் தோன்றி னும் இது எழுதப்பட்டது மே 1949 என்ப தையும் அதை எழுதியவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதையும் அறி யும் போது நம்பமுடியுமா ? ஆனால் அதுவே உண்மை . “ சோஷலிசம் எதற்கு? ” என்ற கட்டுரையில்தான் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார் .

“ தனி மனிதர்களின் சமூக உணர்வு முடங்குகிறது .முதலாளித்துவத்தின் மோசமான தீங்கு என்று நான் கருதுகி றேன். நமது கல்விமுறை முழுவதும் இத்தீங் கால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப் பான்மையை மாணவர் மத்தியில் புகட்டுகிறது. தன் வருங்காலத்திற்கான தயாரிப்பிற்காக பொருளீட்டும் வெற்றியை வழிபட மாணவன் பயிற்று விக்கப்படுகிறான்.” - இதுவும் மேற்படி கட்டுரையின் ஒரு பகுதி தான். எட்டுபக்க முழுகட்டுரையையும் படிக்க ஆவலாக உள்ளதா ? இந்நூலை வாங்குங்கள் .

“உண்மை நம் பக்கம் . கேட்பவர் இணங்கும் வகையில் தெளிவாக அந்த உண்மையைச் சொல்வதுதான் சோஷலிச பிரச்சாரகரின் வேலை . ஆனால் இன்று பிரச்சாரம் அவ்விதத்தில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.‘ பாசிச பூதம் ’ , ‘ ஏகாதிபத்திய அடி வருடி’ போன்ற வார்த்தைகள் பணிச்சுமை யால் துன்புறும் எழுத்தாளருக்கு எழுத எளிமையாக இருக்கலாம் . ஆனால் இடதுசாரி வட்டத்திற்குள் இன்னும் வராத வாசகருக்கு இவை புரியாதது . நம்மைப் போன்ற உறுதியான சோஷலிஸ்டுகளே எத்தனையோ முறை இடதுசாரிப் பத்திரிகைகள் முன்வைக்கும் வாதங்களால் சங்கடப் பட்டிருப்போம் அல்லவா ? ”

இதனைப் படிக்கும்போது நம் நெற்றிப் பொட்டில் யாரோ அறைவது போல் இருக் கிறதா ? “ இடதுசாரி பிரச்சாரம் பற்றிய குறிப் புகள் ” எனும் தலைப்பில் லியோ ஹூபெர் மன் எழுதிய கட்டுரையில் இடம் பெற் றுள்ள கருத்து அது . கட்டுரை வெளிவந்தது 1950 என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல் . முழுக்கட்டுரையையும் படிக்க இந் நூலை வாசியுங்கள் .

1953ல் எழுதப்பட்ட “ வர்க்க நீதி ” கட் டுரை ரோசம் பர்க தம்பதியருக்கு வழங்கப் பட்ட மரணதண்டனையை அவசர அவசர மாக நிறைவேற்றியதையும் அதே சமயம் மூன்று கிரிமினல்களின் மரணதண்டனை யை நிறுத்திவைத்ததையும் ஒப்பிட்டு வர்க்க நீதியை தோலுரிக்கிறது . நமது உச்சநீதிமன் றம் தீர்ப்புகள் நினைவுக்கு வருகிறது .

“முதலாளித்துவ சமூகத்தில் மதப்பழக் கங்கள் எப்படி ஒடுக்குமுறைக்கான சாதனங் களாக உள்ளன என்பதைப் புரிந்து கொள் வதுதான் மார்க்சிய அரசியலுக்கு அடிப் படை சவாலாக உள்ளது ” – என்ன இது ? நாம் இப்போது எதிர்கொள்ளும் பிரச்ச னையை பேசுவது யார் ? கார்னெல் வெஸ்ட். எழுதியது 1984.
“விஞ்ஞானம் மதநம்பிக்கைப் பிரச்சனை யைத் தீர்ப்பதில்லை . வரலாறு நாம் எதிர்த் துப் போராட வேண்டிய, அதே சமயம் பணிந்தும் செல்ல வேண்டிய ஒரு பாரம் பரியத்தைத் தருகிறது. உண்மைக்கான தேடல் முற்றிலும் வரலாற்று பூர்வமானது. சமூக யதார்தங்களைப் புரிந்து கொண்டு ஆராய்ந்த அடிப்படையில் நடைமுறை சாத்தியமான வடிவங்களை அது எடுக்கும் .அவ்வப்போது பிரச்சனையைத் தீர்க்கும் வழக்கத்தோடு உண்மைக்கான தேடல் தொடரும்.” என் கிறது அக்கட்டுரை. இந்நூலில் இடம் பெற்றுள்ள இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிசெய்கிறது. “புரட்சி – மதம் – மக்கள்” (அலைகள் வெளியீடு) என்கிற ஃபிடல் காஸ்ட்ரோ புத்தகத்தை படிப்பது புரிதலை மேலும் கூர்மையாக்கும் .

சோஷலிசத்திற்கு அமைதியான பாதை இல்லை என்பதைக் கூறும் சிலி குறித்த கட் டுரை , மக்களே முக்கியம் எனக் கூறும் கணித வியலாளரின் கட்டுரை ,பாலஸ்தீனம், கியூபா, இஸ்ரேல் , யெல்ட்சினின் ரஷ்யா, நிதிமூலதனச் சிக்கல் , மூலதனத்தின் கோரமுகம், கல்வி, அறிவுஜீவிகள் என இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் காத்திரமானவை . 1949 முதல் 1998 வரை 50 ஆண்டுகளில் “ மன்த்லி ரெவ்யூ” ஏட்டில் எழுதப்பட்ட கட்டுரைக் குவியல்களில் இருந்து சலித்துஎடுக்கப்பட்ட ஆகச் சிறந்த 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனில் இதன் உள்ளடக்க மேன்மையை வீரியத்தை காலத்தை வென்று நிற்கும் அதன் உயிர் துடிப்பைச் சொல்லவும் வேண்டுமோ ?

“நம் எதிரிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று மக்கள் சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கும் நேரத்தில் அவர்களைச் சிந்திக்க வைக்கவும் , செயலில் இறங்கும் அளவுக்கு உத்வேகமளிக்கவும், இயலாத காரியம் ஒன்றைச் செய்வது சிரமமானது, ஆனால் சிரமப்பட்டு அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அளிக்கவும் ஒரு பத்திரிகை தேவைப்பட்டது . அதுதான் ‘ மன்த்லி ரெவ்யூ ’ என்கிறார் அஸ்திறார் டானி குளோவர் என்ற எழுத்தாளர் .

இந்நூலுக்கு ஆர் . விஜயசங்கர் எழுதி யுள்ள முன்னுரையும் மிக முக்கியம் . ஊடகங்களின் முக்கியத்துவம் பாத்திரம் இவற்றை அறிய உதவும். ச.சுப்பாராவ் மொழியாக்கம் நன்று. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஆழ்ந்த விவாதங்களும் புரிதலும் தேவைப்ப டுகிற காலகட்டத்தில் இந்நூலை வெளிக் கொணர்ந்த பாரதி புத்தகாலயம் பாராட்டுக் குரியது .

நன்றி :  தீக்கதிர்  புத்தகமேசை  20 ஜூலை 2014

0 comments :

Post a Comment